Manly Effort 62

611

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

Say not, ‘Tis hard’, in weak, desponding hour,
For strenuous effort gives prevailing power.

இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல்‌ இருக்க வேண்டும்‌; அதைச்‌ செய்வதற்குத்‌ தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்‌.

Yield not to the feebleness which says, “this is too difficult to be done”; labour will give the greatness(of mind) which is necessary (to do it).

பரிமேலழகர் உரை என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும்-அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும்.
விளக்கம்:
('சிறுமை நோக்கி' என்பது 'பெருமை தரும்' என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே, அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)
மணக்குடவர் உரை ஆள்வினை யுடைமையாவது முயற்சியுடைமை. செய்யுங் காரியம் உயர நினைத்துச் சோம்புதல் இல்லாதிருந்தாலும் அது முடியுமாறு முயல வேண்டுத் லின், அதன்பின் இது கூறப்பட்டது (இ-ள்.) ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்; முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால்,
(என்றவாறு). இது வினை செய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.
612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

In action be thou, ‘ware of act’s defeat;
The world leaves those who work leave incomplete!

தொழிலாகிய குறையைச்‌ செய்யாமல்‌ கைவிட்டவரை உலகம்‌ கைவிடும்‌; ஆகையால்‌ தொழிலில்‌ முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்‌.

Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.

பரிமேலழகர் உரை வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று-வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக் கண் வினைகெடல் ஓம்பல்-அதனான் செய்யப்படும் வினைக் கண் தவிர்ந்திருத்தலை ஒழிக.
விளக்கம்:
(குறை-இன்றியமையாப் பொருள். அது ''பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே'' [புறநா. 188] என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வினை செய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க; வினைக் குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று,
(என்றவாறு). இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.
613

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு

In strenuous effort doth reside
The power of helping others: noble pride!

பிறர்க்கு உதவி செய்தல்‌ என்னும்‌ மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில்‌ நிலைத்திருக்கின்றது.

The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

பரிமேலழகர் உரை தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று-முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு-எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு.
விளக்கம்:
(பொருள் கை கூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர் மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது; பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம்,
(என்றவாறு). இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.
614

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்

Beneficent intent in men by whom no strenuous work is wrought,
Like battle-axe in sexless being’s hand availeth nought.

முயற்சி இல்லாதவன்‌ உதவி செய்பவனாக இருத்தல்‌, பேடி தன்‌ கையால்‌ வாளை எடுத்து ஆளும்‌ தன்மைபோல்‌ நிறைவேறாமல்‌ போகும்‌.

The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who hasa sword in its hand.

பரிமேலழகர் உரை தாளாண்மை இல்லாதான் வேளாண்மை-முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும்-படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம்.
விளக்கம்:
('ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற் பெயர். பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடைனாயினும், அது தன் வறுமையான் முடியாது என்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டா லஞ் சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும்,
(என்றவாறு). இஃது அறம் செய்யமாட்டானென்றது.
615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்

Whose heart delighteth not in pleasure, but in action finds delight,
He wipes away his kinsmen’s grief and stands the pillar of their might.

தன்‌ இன்பத்தை விரும்பாதவனாய்‌ மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன்‌, தன்‌ சுற்றத்தாரின்‌ துன்பத்தைப்‌ போக்கித்‌ தாங்குகின்ற தூண்‌ ஆவான்‌.

He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.

பரிமேலழகர் உரை இன்பம் விழையான் வினை விழைவான்-தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண்-தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம்.
விளக்கம்:
(இஃது ஏகதேச உருவகம். 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், ''மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்கு'' [நாலடி. 387] என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம்; எனவே, தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன், தன்கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவ தொரு தூணாம்,
(என்றவாறு). ஆதலால், வருத்தம் பாராது முயல வேண்டு மென்பது.
616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

Effort brings fortune’s sure increase,
Its absence brings to nothingness.

முயற்சி ஒருவனுக்குச்‌ செல்வத்தைப்‌ பெருகச்‌ செய்யும்‌; முயற்சி இல்லாதிருத்தல்‌ அவனுக்கு வறுமையைச்‌ சேர்த்து விடும்‌.

Labour will produce wealth; idleness will bring poverty.

பரிமேலழகர் உரை முயற்சி திருவினை ஆக்கும்-அரசர்மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும்-அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும்.
விளக்கம்:
('செல்வம்-அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே பகை வரான் அழிவர் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முயற்சி செல்வத்தை உண்டாக்கும்; முயலாமை வறுமையை உண்டாக்கும்,
(என்றவாறு). இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.
617

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்

In sluggishness is seen misfortune’s lurid form, the wise declare;
Where man unslothful toils, she of the lotus flower is there!

ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்‌; சோம்பல்‌ இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள்‌ வாழ்கின்றாள்‌.

They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (thegoddess of prosperity) dwells with the labour of the industrious.

பரிமேலழகர் உரை மா முகடி மடி உளாள்-கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் என்ப-திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர்.
விளக்கம்:
(பாவத்தின் கருமை அதன் பயனாக முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார் மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்,
(என்றவாறு). இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.
618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி

‘Tis no reproach unpropitious fate should ban;
But not to do man’s work is foul disgrace to man!

நன்மை விளைக்கும்‌ ஊழ்‌ இல்லாதிருத்தல்‌ யார்க்கும்‌ பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

பரிமேலழகர் உரை பொறி இன்மை யார்க்கும் பழியன்று-பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி-அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது.
விளக்கம்:
(அறிய வேண்டுவன- வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை,' என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது; அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது,
(என்றவாறு). அறிவு - காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ வென்றார்க்கு , இது கூறப்பட்டது.
619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

Though fate-divine should make your labour vain;
Effort its labour’s sure reward will gain.

ஊழின்‌ காரணத்தால்‌ ஒரு செயல்‌ முடியாமல்‌ போகுமாயினும்‌, முயற்சி தன்‌ உடம்பு வருந்திய வருத்தத்தின்‌ கூலியையாவது கொடுக்கும்‌.

Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.

பரிமேலழகர் உரை தெய்வத்தான் ஆகாது எனினும்-முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்-முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலி அளவு தரும், பாழாகாது.
விளக்கம்:
(தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும என்பது உம்மையால் பெற்றாம். இரு வழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும், ஒருவினையின் கண்ணே முயல்வனாயின், முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும்,
(என்றவாறு) இது புண்ணியமில்லையாயினும், பயன் கொடுக்கும் என்றது.
620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

Who strive with undismayed, unfaltering mind,
At length shall leave opposing fate behind.

சோர்வு இல்லாமல்‌ முயற்சியில்‌ குறைவு இல்லாமல்‌ முயல்கின்றவர்‌, (செயலுக்கு இடையூறாக வரும்‌) ஊழையும்‌ ஒரு காலத்தில்‌ தோல்வியுறச்‌ செய்வர்‌.

They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.

பரிமேலழகர் உரை
விளக்கம்:
(தாழ்வறுதல்-சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல், ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின், பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார். தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர், பயன் படாமல் விலக்குகின்ற தீய வினையையும் முதுகு புறங்காண்பர்,
(என்றவாறு). இஃது ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது.


transliteration

arumai utaiththaenru asaavaamai vaendum
paerumai muyachi tharum

vinaikkan vinaikedal oampal vinaikkurai
theerndhthaarin theerndhthanru ulaku

thaalaanmai yennum thakaimaikkan thangkitrrae
vaelaanmai yennunj serukku

thaalaanmai illaathaan vaelaanmai paetikai
vaalaanmai polak kedum

inpam vilaiyaan vinaivilaivaan thankaelir
thunpam thutaiththoonrum thoon

muyachi thiruvinai aakkum muyatrrinmai
inmai pukuththi vidum

matiyulaal maamukati yenpa matiyilaan
thaalulaan thaamaraiyi naal

poriyinmai yaarkkum paliyanru arivarindhthu
aalvinai inmai pali

thaeivaththaan aakaa thaeninum muyachithan
maeivaruththak kooli tharum

oolaiyum uppakkam kaanpar ulaivinrith
thaalaathu ugnyatrru pavar