Energy 60

591

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று

‘Tis energy gives men o’er that they own a true control;
They nothing own who own not energy of soul.

ஒருவர்‌ பெற்றிருக்கின்றார்‌ என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்‌; ஊக்கம்‌ இல்லாதவர்‌ வேறு எதைப்‌ பெற்றிருந்தாலும்‌ அதை உடையவர்‌ ஆவரோ?

Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?

பரிமேலழகர் உரை உடையர் எனப்படுவது ஊக்கம்-ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ- அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.
விளக்கம்:
('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்'மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.)
மணக்குடவர் உரை ஊக்கமுடைமையாவது அதனைச் செய்யுமிடத்துக் காலத்து அருமையை ஓராது இவ்வாறு செய்யக்கடவேனென்று கருதுங் கருத்துடைமை. பிறர் நாடு கொள்ளுங்காலத்து அவ்விடத்துள்ள செய்தியை ஒற்றரால் அறிந்த பின்பு அதனையே அறிந்து கொள்ளக்கடவேனென்று நினைக்கும் கருத்து வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை ; அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்,
(என்றவாறு).
592

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்

The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.

ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்‌; மற்றப்‌ பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல்‌ நீங்கிவிடுவதாகும்‌.

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

பரிமேலழகர் உரை உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலை நில்லாது நீங்கிப் போம்.
விளக்கம்:
('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும்,
(என்றவாறு) பொருள் உடையார்க்கு எல்லா முண்டா மென்பார்க்கு இது கூறப் பட்டது.
593

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்

‘Lost is our wealth,’ they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.

ஊக்கத்தை உறுதியாகத்‌ தம்கைப்‌ பொருளாக உடையவர்‌, ஆக்கம்‌ (இழந்துவிட்ட காலத்திலும்‌) இழந்துவிட்டோம்‌ என்று கலங்கமாட்டார்‌.

They who are possessed of enduring energy will not trouble themselves, saying, “we have lost our property.”

பரிமேலழகர் உரை ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார்-இழந்தவராயினும் யாம் கைப்பொருளை இழந்தோம் என்று அலமரார்; ஒரு வந்தம் ஊக்கம் கைத்து உடையார்-நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்.
விளக்கம்:
('ஆக்கம்' ஆகுபெயர். ஒரு வந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: "கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி 19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ளமிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார், (எ – று). இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.
594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை

The man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell.

சோர்வு இல்லாத ஊக்கம்‌ உடையவனிடத்தில்‌ ஆக்கமானது தானே அவன்‌ உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச்‌ சேரும்‌.

Wealth will find its own way to the man of unfailing energy.

பரிமேலழகர் உரை அசைவு இலா ஊக்கம் உடையான் உழை-அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்-பொருள் தானே வழி வினவிக்கொண்டு செல்லும்.
விளக்கம்:
(அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத் தானே சென்று சாரும் என்பார், 'அதர் வினாய்ச் செல்லும்' என்றார். எய்தி நின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அசைவில்லாத ஊக்கமுடையான் மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும், (எ-று). நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.
595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds.

நீர்ப்பூக்களின்‌ தாளின்‌ நீளம்‌ அவை நின்ற நீரின்‌ அளவினவாகும்‌; மக்களின்‌ ஊக்கத்தின்‌ அளவினதாகும்‌ வாழ்க்கையின்‌ உயர்வு.

The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s greatness proportionate to their minds.

பரிமேலழகர் உரை வெள்ளத்து அனைய மலர் நீட்டம்-நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு-அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி.
விளக்கம்:
('மலர்' ஆகுபெயர். நீர் மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி, அதுபோல, மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம்,
(என்றவாறு). இஃது ஊக்கம் இதனானே உண்டா மென்றது.
596

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

Whate’er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.

எண்ணுவதெல்லாம்‌ உயர்வைப்‌ பற்றியே எண்ணவேண்டும்‌; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும்‌ அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (byfate), it will have the nature of not being thrust from him.

பரிமேலழகர் உரை உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்-அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து-அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து.
விளக்கம்:
(உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க ; அந்நினைவு முடியா மல் தப்பினும், முயன்று பெற்றதனோடு ஒக்கும்,
(என்றவாறு) இது தப்பினும் பழிக்கப்படா தென்றது.
597

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு

The men of lofty mind quail not in ruin’s fateful hour,
The elephant retains his dignity mind arrows’ deadly shower.

உடம்பை மறைக்குமளவு அம்புகளால்‌ புண்பட்டும்‌, யானை தன்‌ பெருமையை நிலைநிறுத்தும்‌; அதுபோல்‌, ஊக்கம்‌ உடையவர்‌ அழிவு வந்தவிடத்திலும்‌ தளரமாட்டார்‌.

The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.

பரிமேலழகர் உரை களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும்-களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார்-அது போல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.
விளக்கம்:
(புதை - அம்புக்கட்டு; பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்; மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறு போல,
(என்றவாறு). இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.
598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு

The soulless man can never gain
Th’ ennobling sense of power with men.

ஊக்கம்‌ இல்லாதவர்‌, இவ்வுலகில்‌ யாம்‌ வண்மை உடையேம்‌ ‘ என்று தம்மைத்‌ தாம்‌ எண்ணி மகிழும்‌ மகிழ்ச்சியை அடையமாட்டார்‌.

Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, “we have excercised liaberality”.

பரிமேலழகர் உரை உள்ளம் இல்லாதவர்-ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார்-இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெற்றார்.
விளக்கம்:
(ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உள்ள மிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென் னுங் களிப்பினைப் பெறார்,
(என்றவாறு). இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள் வரவு இல்லையாம்; ஆதலான், அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.
599

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்

Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed!

யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும்‌ ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால்‌ அதற்கு அஞ்சும்‌.

Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.

பரிமேலழகர் உரை பரியத கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.
விளக்கம்:
(பேருடம் பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும், யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யானை பெரிய உடம்பின் தாய், கூரிய கோட்டையும் உடைத் தாயினும், புலி பொருமாயின் அஞ்சும்,
(என்றவாறு). இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.
600

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு

Firmness of soul in man is real excellance;
Others are trees, their human form a mere pretence.

ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம்‌ இல்லாதவர்‌ மரங்களே: (வடிவால்‌) மக்களைப்‌ போல்‌ இருத்தலே வேறுபாடு.

Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.

பரிமேலழகர் உரை ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை-ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி; அஃது இல்லார் மரம்-அவ்வூக்க மிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார்; மக்களாதலே வேறு - சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிது இல்லை.
விளக்கம்:
('உரம்' என்பது அறிவாதல், "உரனென்னுந் தோட்டியான்" (குறள். 24) என்பதனானும் அறிக. மரம் என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும், மரத்திற்குள்ள பயன்பாடின்மைபற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும்; தேவர் கோட்டம், இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன. இவை மூன்று பாட்டானும், ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனுக்கு அறிவாவது உள்ள மிகுதியுடைமை; அஃதில்லா தார் மரமென்று சொல்லப்படுவர்; மக்கள் வடிவாதலே மரத்தின் வேறாகத் தோன்றுகின்றது,
(என்றவாறு). இஃது அறிவும் இது தானே யென்றது.


transliteration

utaiyar yenappaduvathu ookkam akhthillaar
utaiyathu utaiyaroa matrru

ullam utaimai utaimai porulutaimai
nillaathu neengki vidum

aakkam ilandhthaemaenru allaavaar ookkam
oruvandhtham kaiththutai yaar

aakkam atharvinaaich sellum asaivilaa
ookka mutaiyaa nulai

vaellath thanaiya malarneetdam maandhthartham
ullath thanaiyathu uyarvu

ulluva thaellaam uyarvullal matrrathu
thallinundh thallaamai neerththu

sithaividaththu olkaar uravor puthaiyampitr
patduppaa toonrung kaliru

ullam ilaathavar yeithaar ulakaththu
valliyam yennunj serukku

pariyathu koorngkoatdathu aayinum yaanai
vaerooum pulithaak kurin

uramoruvatrku ulla vaerukkaiakh thillaar
marammakka laathalae vaeru