குறள் 595

ஊக்கமுடைமை

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

vaellath thanaiya malarneetdam maandhthartham
ullath thanaiyathu uyarvu


Shuddhananda Bharati

Energy

Water depth is lotus height
Mental strength is men's merit.


GU Pope

Energy

With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds.

The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.


Mu. Varadarajan

நீர்ப்பூக்களின்‌ தாளின்‌ நீளம்‌ அவை நின்ற நீரின்‌ அளவினவாகும்‌; மக்களின்‌ ஊக்கத்தின்‌ அளவினதாகும்‌ வாழ்க்கையின்‌ உயர்வு.


Parimelalagar

வெள்ளத்து அனைய மலர் நீட்டம்-நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு-அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி.
விளக்கம்:
('மலர்' ஆகுபெயர். நீர் மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.)


Manakkudavar

(இதன் பொருள்) புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி, அதுபோல, மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம்,
(என்றவாறு). இஃது ஊக்கம் இதனானே உண்டா மென்றது.