குறள் 599

ஊக்கமுடைமை

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்

pariyathu koorngkoatdathu aayinum yaanai
vaerooum pulithaak kurin


Shuddhananda Bharati

Energy

Huge elephant sharp in tusk quails
When tiger, less in form, assails.


GU Pope

Energy

Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed!

Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.


Mu. Varadarajan

யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும்‌ ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால்‌ அதற்கு அஞ்சும்‌.


Parimelalagar

பரியத கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.
விளக்கம்:
(பேருடம் பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும், யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.)


Manakkudavar

(இதன் பொருள்) யானை பெரிய உடம்பின் தாய், கூரிய கோட்டையும் உடைத் தாயினும், புலி பொருமாயின் அஞ்சும்,
(என்றவாறு). இஃது உள்ளமுடைமை யில்லாதார் பெரியராயினும் கெடுவார் என்றது.