The Knowledge of Power 48

471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

The force the strife demands, the force he owns, the force of foes,
The force of friends; these should he weigh ere to the war he goes.

செயலின்‌ வலிமையும்‌, தன்‌ வலிமையும்‌, பகைவனுடைய வலிமையும்‌, இருவர்க்கும்‌ துணையானவரின்‌ வலிமையும்‌ ஆராய்ந்து செய்யவேண்டும்‌.

Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength ofhis enemy, and the strength of the allies (of both), and then let him act.

பரிமேலழகர் உரை வினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும்; தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும்; மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும்; துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க.
விளக்கம்:
[இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால், தோற்றல் ஒரு தலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.]
மணக்குடவர் உரை வலியறிதலாவது தனக்கு உள்ள வலியும் பிறர்க்கு உள்ள வலியும் அறிதல். செய்யத்தக்க வினையை யெண்ணினாலும் அதனைச் செய்து முடிக்குங்கால் வலி யறிந்து செய்யவேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) செய்யும் வினையினது வலியும், தனக்கு உண்டான வலியும், பகைவனது வலியும், தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினை செய்க,
(என்றவாறு). இது வலியறியும் இடம் கூறிற்று.
472

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

Who know what can be wrought, with knowledge of the means, on this,
Their mind firm set, go forth, nought goes with them amiss.

தனக்குப்‌ பொருந்தும்‌ செயலையும்‌, அதற்காக அறிய வேண்டியதையும்‌ அறிந்து அதனிடம்‌ நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும்‌ இல்லை ஒன்றும்‌ இல்லை.

There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), makethemselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, andapply themselves wholly to their object.

பரிமேலழகர் உரை ஒல்வது அறிவது அறிந்து - தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேண்டுவதாய வலியையும் அறிந்து; அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன் கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல் - முடியாத பொருள் இல்லை.
விளக்கம்:
['ஒல்வது' எனவே வினைவலி முதலாய மூன்றும் அடங்குதலின், ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து, அதன் பின்பு அவ்வளவிலே நின்று, ஒழுகுவராயின், அவாக்கு இயலாதது இல்லை ,
(என்றவாறு). இது வலியறிந்தாலும் அடைந்தொழுக வேண்டு மென்றது.
473

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்

Ill-deeming of their proper powers, have many monarchs striven,
And midmost of unequal conflict fallen asunder riven.

தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல்‌ ஊக்கத்தால்‌ முனைந்து தொடங்கி இடையில்‌ அதை முடிக்க வகையில்லாமல்‌ அழிந்தவர்‌ பலர்‌.

There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war,and broken down in the midst of it.

பரிமேலழகர் உரை உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே: ஊக்கத்தின் ஊக்கி - மன எழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி; இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.
விளக்கம்:
['உடைய' என்பது அவாய் நின்றமையின், செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்முடைய வலியறியாது மிகுதியாலே வினை செய்யத் தொடங்கி, அது முடிவதன்முன்னே கெட்டார் பலா,
(என்றவாறு). இது வலியறியாதார் கெடுவரென்றது.
474

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

Who not agrees with those around, no moderation knows,
In self-applause indulging, swift to ruin goes.

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல்‌. தன்‌ வலிமையின்‌ அளவையும்‌ அறியாமல்‌, தன்னை வியந்து மதித்துக்‌ கொண்டிருப்பவன்‌ விரைவில்‌ கெடுவான்‌.

He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and doesnot live in peace with his neighbours.

பரிமேலழகர் உரை ஆங்கு அமைந்து ஒழுகான் - அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது; அளவு அறியான் - தன் வலியளவு அறிவதும் செய்யாது; தன்னை வியந்தான் - தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன்; விரைந்து கெடும் - விரையக் கெடும்
விளக்கம்:
[காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்' என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றே அயல் வேந்தரோடு செயற்பாலது; இவையன்றித் தான் மெலியனாய் வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்து கெடும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் , தன்வலியளவும் அறிய யாதே, தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன், (எ - று ). இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.
475

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

With peacock feathers light, you load the wain;
Yet, heaped too high, the axle snaps in twain.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும்‌, அந்தப்‌ பண்டமும்‌ (அளவோடு ஏற்றாமல்‌) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால்‌ அச்சு முறியும்‌.

The axle tree of a bandy, loaded only with peacocks’ feathers will break, if it be greatly overloaded.

பரிமேலழகர் உரை பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.
விளக்கம்:
[உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான். தான் வலியனே ஆயினும் அவர் தொக்க வழி வலியழியும்; என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும் உளர். ஒருவர் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பீலி யேற்றிய சகடமும் அச்சமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின்,
(என்றவாறு) இஃது அரண் மிகுதல் நன் றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லா தென்று கூறிற்று.
476

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்

Who daring climbs, and would himself upraise
Beyond the branch’s tip, with life the forfeit pays.

ஒரு மரத்தின்‌ நுனிக்கொம்பில்‌ ஏறியவர்‌, அதையும்‌ கடந்து மேலும்‌ ஏற முனைந்தால்‌, அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்‌

There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to gofurther.

பரிமேலழகர் உரை கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒருமரக் கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.
விளக்கம்:
['நுனிக் கொம்பர்' என்பது 'கடைக்கண்' என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதி' என்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்' என்னும் பொருள்தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்' என்றமையின், இதனான் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருமரத்தின் நுனிக்கொம்பேறினவா தம்பள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின், அஃது அவர் தம்முயிர்க்கு இறுதியாகிவிடும்,
(என்றவாறு) இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவு சென்றால், பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.
477

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி

With knowledge of the measure due, as virtue bids you give!
That is the way to guard your wealth, and seemly live.

தக்க வழியில்‌ பிறர்க்குக்‌ கொடுக்கும்‌ அளவு அறிந்து கொடுக்கவேண்டும்‌; அதுவே பொருளைப்‌ போற்றி வாழும்‌ வழியாகும்‌.

Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is theway to preserve his property.

பரிமேலழகர் உரை ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியானே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக; அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருகாப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்.
விளக்கம்:
[ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் ''வகுத்தலும் வல்லதரசு'' (குறள்.385) என்புழி உரைத்தாம். எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி, அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற் பொருட்டு வைப்பாக்கி, நின்ற ஒன்றனை ஈதல், பிறரும், ''வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்'' (திரிகடுகம், 21) என்றார். பேணிக் கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பில்லாத அதனை தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க ; பொருளை யுண்டாக்கி வழங்கும் நெறி அது வாதலால்,
(என்றவாறு). இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவு செய்ய வேண்டும் மென்று கூறிற்று.
478

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை

Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare.

பொருள்‌ வரும்‌ வழி (வருவாய்‌) சிறியதாக இருந்தாலும்‌, போகும்‌ வழி (செலவு) விரிவுபடாவிட்டால்‌ அதனால்‌ தீங்கு இல்லை.

Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not largerthan his income.

பரிமேலழகர் உரை ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்; போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறி அளவு அதனின் பெருகாதாயின்.
விளக்கம்:
['இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்' என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருள் வரும் வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின்,
(என்றவாறு). இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.
479

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

Who prosperous lives and of enjoyment knows no bound,
His seeming wealth, departing, nowhere shall be found.

பொருளின்‌ அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்‌) இருப்பது போல்‌ தோன்றி இல்லாமல்‌ மறைந்து கெட்டுவிடும்‌.

The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, evenwhile it seems to continue.

பரிமேலழகர் உரை அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டாதான் வாழ்க்கைகள்; உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.
விளக்கம்:
[அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக் கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல். தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி' என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கைகள் உளபோலத் தோன்றி, அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும்,
(என்றவாறு). பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.
480

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

Beneficence that measures not its bound of means,
Will swiftly bring to nought the wealth on which it leans.

தனக்குப்‌ பொருள்‌ உள்ள அளவை ஆராயாமல்‌ மேற்கொள்ளும்‌ ஒப்புரவினால்‌, ஒருவனுடைய செல்வத்தின்‌ அளவு விரைவில்‌ கெடும்‌.

The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.

பரிமேலழகர் உரை உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால்; வளவரைவல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்
விளக்கம்:
['ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள் வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனக்கு உள்ளவளவை நினையாதே ஒப்புரவு செய்வானது செல் வத்தினளவு விரைவிற் கெடும்,
(என்றவாறு). மேல், முதலுக்குச் செலவு குறைய வேண்டுமென்றார் அவ்வாறு செய் யின் ஒப்புரவு செய்யுமாறு என்னை யென்றார்க்கு, இது கூறினார்.


transliteration

vinaivaliyum thanvaliyum maatrraan valiyum
thunaivaliyum thookkich seyal

olva tharivathu arindhthathan kanthangkich
selvaarkkuch sellaathathu il

utaiththam valiyariyaar ookkaththin ookki
itaikkan murindhthaar palar

amaindhthaang kolukaan alavariyaan thannai
viyandhthaan viraindhthu kedum

peelipaei saakaadum achirum appandanj
saala mikuththup paeyin

nunikkompar yaerinaar akhthirandh thookkin
uyirkkiruthi aaki vidum

aatrrin aravarindhthu eeka athuporul
potrri valangku naeri

aakaaru alavitti thaayinung kaetillai
pokaaru akalaak katai

alavarindhthu vaalaathaan vaalkkai ulapola
illaakith thonraak kedum

ulavarai thookkaatha oppura vaanmai
valavarai vallaik kedum