குறள் 479

வலியறிதல்

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

alavarindhthu vaalaathaan vaalkkai ulapola
illaakith thonraak kedum


Shuddhananda Bharati

Judging strength

Who does not know to live in bounds
His life seems rich but thins and ends.


GU Pope

The Knowledge of Power

Who prosperous lives and of enjoyment knows no bound,
His seeming wealth, departing, nowhere shall be found.

The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, evenwhile it seems to continue.


Mu. Varadarajan

பொருளின்‌ அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்‌) இருப்பது போல்‌ தோன்றி இல்லாமல்‌ மறைந்து கெட்டுவிடும்‌.


Parimelalagar

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டாதான் வாழ்க்கைகள்; உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.
விளக்கம்:
[அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக் கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல். தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி' என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு]


Manakkudavar

(இதன் பொருள்) தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கைகள் உளபோலத் தோன்றி, அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும்,
(என்றவாறு). பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.