குறள் 473

வலியறிதல்

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்

utaiththam valiyariyaar ookkaththin ookki
itaikkan murindhthaar palar


Shuddhananda Bharati

Judging strength

Many know not their meagre might
Their pride breaks up in boastful fight.


GU Pope

The Knowledge of Power

Ill-deeming of their proper powers, have many monarchs striven,
And midmost of unequal conflict fallen asunder riven.

There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war,and broken down in the midst of it.


Mu. Varadarajan

தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல்‌ ஊக்கத்தால்‌ முனைந்து தொடங்கி இடையில்‌ அதை முடிக்க வகையில்லாமல்‌ அழிந்தவர்‌ பலர்‌.


Parimelalagar

உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே: ஊக்கத்தின் ஊக்கி - மன எழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி; இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.
விளக்கம்:
['உடைய' என்பது அவாய் நின்றமையின், செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.]


Manakkudavar

(இதன் பொருள்) தம்முடைய வலியறியாது மிகுதியாலே வினை செய்யத் தொடங்கி, அது முடிவதன்முன்னே கெட்டார் பலா,
(என்றவாறு). இது வலியறியாதார் கெடுவரென்றது.