The Correction of Faults 44

431

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain.

செருக்கும்‌ சினமும்‌ காமமும்‌ ஆகிய இந்தக்‌ குற்றங்கள்‌ இல்லாதவருடைய வாழ்வில்‌ காணும்‌ பெருக்கம்‌ மேம்பாடு உடையதாகும்‌.

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

பரிமேலழகர் உரை செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம்; பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.
விளக்கம்:
(மதம்: செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின், மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை குற்றங்கடிதலாவது காமக் குரோத லோப மோக மத மாற்சரிய மென்னும் ஆறு குற்றமுங் கடிந்து ஒழுகுதல். இஃது அறிவுடையாராயினும் குற்றங்கடிதல் வேண்டுமென்று அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய் தொழுகுதலும் இல்லாதார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மை யுடைத்து,
(என்றவாறு) பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின், செருக்கு என்றார்.
432

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

A niggard hand, o’erweening self-regard, and mirth
Unseemly, bring disgrace to men of kingly brith.

பொருள்‌ கொடாத தன்மையும்‌, மாட்சியில்லாத மானமும்‌, தகுதியற்ற மகிழ்ச்சியும்‌ தலைவனாக இருப்பவனுக்குக்‌ குற்றங்களாகும்‌.

Avarice, undignified pride, and low pleasures are faults in a king.

பரிமேலழகர் உரை இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின் நீங்கிய மானமும்; மாணா உவகையும் - அளவிறந்த உவகையும்; இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம்.
விளக்கம்:
(மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார்; அஃதாவது, ''அந்தணர் சான்றோர் அருந்தவதோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவ"ரை (புறம். வெ.மா. பாடாண்-33) வணங்காமையும், முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம்; பிறரும், "சினனே காமம் கழிகண்ணோட்டம்" என்றிவற்றை "அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது" (பதிற். 22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உலோபமும், நன்மையைக் கடந்த மானமும், நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய விம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம்,
(என்றவாறு). இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால், பெரும்பான்மையும் அரசர்க்க வேண்டுமென்பது கூறிற்று.
433

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

Though small as millet-seed the fault men deem;
As palm tree vast to those who fear disgrace ‘twill seem.

பழி நாணுகின்ற பெருமக்கள்‌ தினையளவாகிய சிறு குற்றம்‌ நேர்ந்தாலும்‌, அதைப்‌ பனையளவாகக்‌ கருதிக்‌ (குற்றம்‌ செய்யாமல்‌) காத்துக்கொள்வர்‌.

Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as apalmyra tree.

பரிமேலழகர் உரை பழி நாணுவார் - பழியை அஞ்சுவார்; தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக்' கொள்வர்.
விளக்கம்:
('குற்றம்' சாதிப் பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார்; பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அது வாராமல் காப்பர் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தினையளவு குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர் பழிக்கு நாணுவார்,
(என்றவாறு)
434

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை

Freedom from faults is wealth; watch heedfully
‘Gainst these, for fault is fatal enmity.

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும்‌ பகையாகும்‌. ஆகையால்‌ குற்றம்‌ செய்யாமல்‌ இருப்பதே நோக்கமாகக்‌ கொண்டு காத்துக்‌ கொள்ளவேண்டும்‌.

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

பரிமேலழகர் உரை அற்றம் தருஉம் பகை குற்றமே - தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே; குற்றமே பொருளாகக் காக்க - ஆகலான், அக்குற்றம் தன்கண் வாராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்.
விளக்கம்:
(இவைபற்றி அல்லது பகைவர் அற்றம் தாரா மையின் 'இவையே பகையாவன' என்னும் வடநூலார் மதம் பற்றி, 'குற்றமே அற்றம் தருஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டு என்பார், 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது "அரும்பண்பினால் தீமை காக்க," என்பதுபோல நின்றது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க ; அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான்,
(என்றவாறு). இது குற்றங் கடிய வேண்டு மென்றது.
435

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

His joy who guards not ‘gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.

குற்றம்‌ நேர்வதற்கு முன்னமே வராமல்‌ காத்துக்‌ கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன்‌ நின்ற வைக்கோல்போர்போல்‌ அழிந்துவிடும்‌.

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

பரிமேலழகர் உரை வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக் கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை; எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரிமுகத்து நின்று வைக்குவை போல அழிந்து விடும்.
விளக்கம்:
('குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி. 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய் யானது செல்வம், எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும்,
(என்றவாறு). இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.
436

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

Faultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men.

முன்னே தன்‌ குற்றத்தைக்‌ கண்டு நீக்கிப்‌ பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால்‌ தலைவனுக்கு என்ன குற்றமாகும்‌?

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils ofothers.

பரிமேலழகர் உரை தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முன்னர்த் தன் குற்றத்தைக் கண்டு கடிந்து, பின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது?
விளக்கம்:
('அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம்; அது கடிந்தவழி முறை செய்தலாம்' என்பார், 'என் குற்றம் ஆகும்' என்றார்; எனவே, தன் குற்றம் கடிந்தவனே முறை செய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின், அரசனுக்கு என்ன குற்ற முள் தாம் ?
(என்றவாறு) இது தன் மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது.
437

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்

Who leaves undone what should be done, with niggard mind,
His wealth shall perish, leaving not a wrack behind.

செய்யத்தக்க நன்மைகளைச்செய்யாமல்‌ பொருளைச்‌ சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம்‌ உய்யுந்தன்மை இல்லாமல்‌ அழியும்‌.

The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought toexpend it will waste away and not continue.

பரிமேலழகர் உரை செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளாள் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம்; உயற்பாலது அன்றிக் கெடும் - பின் உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும்.
விளக்கம்:
(செயற்பால் ஆவன : அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது; பெருக்குதல்: அது "பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை, தன்னின் ஆகும் தரணி; தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள்; அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே" (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப்பயன் கொள்ளாமையின், 'கெடும்' என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படுமவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம், பின் உளதாம் பான் மைத்தன்றி வறிதே கெடும்,
(என்றவாறு).
438

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று

The greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all.

பொருளினிடத்தில்‌ பற்றுக்‌ கொள்ளும்‌ உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம்‌ எதனோடும்‌ சேர்த்து எண்ணத்தகாத ஒரு தனிக்‌ குற்றமாகும்‌.

Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).

பரிமேலழகர் உரை பற்றுள்ளம் என்னும் இவறன்மை . பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை; எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று; மிக்கது.
விளக்கம்:
(இவறலது தன்மையாவது: குணங்கள்எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு. ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள் ளும் எண்ணப்படுவ தொன்றன்று,
(என்றவாறு). இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படாதென்றது.
439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

Never indulge in self-complaisant mood,
Nor deed desire that yields no gain of good.

எக்காலத்திலும்‌ தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத்‌ தான்‌ விரும்பவும்‌ கூடாது.

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

பரிமேலழகர் உரை எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நான்கு மதியாது ஒழிக; நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக.
விளக்கம்:
(தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும், அறனும் பொருளும் இகழப்படுதலானும், 'எஞ்ஞான்றும் வியவற்க' என்றும், 'கருதியது முடித்தே விடுவல்' என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின், அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எல்லா நாளுந் தன்னைப் பொய்யனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும், அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யா தொழிக,
(என்றவாறு) செய்யிற் கெடு மென்றவாறாயிற்று.
440

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்

If, to your foes unknown, you cherish what you love,
Counsels of men who wish you harm will harmless prove.

தன்‌ விருப்பம்‌ பிறர்க்குத்‌ தெரியாதபடி விருப்பமானவற்றை நுகர வல்லவனானால்‌, பகைவர்‌ தன்னை வஞ்சிப்பதற்காகச்‌ செய்யும சூழ்ச்சிகள்‌ பலிக்காமல்‌ போகும்‌.

If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.

பரிமேலழகர் உரை காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின்; ஏதிலார் நூல் ஏதில - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம்.
விளக்கம்:
(அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காதலிக்கப்பட்ட யாவற்றின் மேலுஞ் செல்லுங் காதலைப் பிறர றியாமற் செலுத்துவனாயின், பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது அயலாம்,
(என்றவாறு) நூலென்பது அவர் கற்ற கல்வி.


transliteration

serukkuchiinamuchiirumaiyum illaar paerukkam paerumitha
paerukkam paerumitha neerththu

ivaralum maanpirandhtha maanamum maanaa
uvakaiyum yaetham iraikku

thinaiththunaiyaang kutrram varinum panaiththunaiyaak
kolvar palinaanu vaar

kutrramae kaakka porulaakak kutrramae
atrrandh throoum pakai

varumunnark kaavaathaan vaalkkai yerimunnar
vaiththooru polak kedum

thankutrram neekkip pirarkutrrang kaankitrpin
yenkutrra maakum iraikku

seyatrpaala seiyaa thivariyaan selvam
uyatrpaala thanrik kedum

patrrullam yennum ivaranmai yetrrullum
yennap paduvathon ranru

viyavatrka yenjgnyaanrum thannai nayavatrka
nanri payavaa vinai

kaathala kaathal ariyaamai uikkitrpin
yaethila yaethilaar nool