குறள் 437

குற்றங்கடிதல்

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்

seyatrpaala seiyaa thivariyaan selvam
uyatrpaala thanrik kedum


Shuddhananda Bharati

Avoiding faults

That miser's wealth shall waste and end
Who would not for a good cause spend.


GU Pope

The Correction of Faults

Who leaves undone what should be done, with niggard mind,
His wealth shall perish, leaving not a wrack behind.

The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought toexpend it will waste away and not continue.


Mu. Varadarajan

செய்யத்தக்க நன்மைகளைச்செய்யாமல்‌ பொருளைச்‌ சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம்‌ உய்யுந்தன்மை இல்லாமல்‌ அழியும்‌.


Parimelalagar

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளாள் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம்; உயற்பாலது அன்றிக் கெடும் - பின் உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும்.
விளக்கம்:
(செயற்பால் ஆவன : அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது; பெருக்குதல்: அது "பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை, தன்னின் ஆகும் தரணி; தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள்; அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே" (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப்பயன் கொள்ளாமையின், 'கெடும்' என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படுமவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம், பின் உளதாம் பான் மைத்தன்றி வறிதே கெடும்,
(என்றவாறு).