குறள் 438

குற்றங்கடிதல்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று

patrrullam yennum ivaranmai yetrrullum
yennap paduvathon ranru


Shuddhananda Bharati

Avoiding faults

The gripping greed of miser's heart
Is more than fault the worst apart.


GU Pope

The Correction of Faults

The greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all.

Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).


Mu. Varadarajan

பொருளினிடத்தில்‌ பற்றுக்‌ கொள்ளும்‌ உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம்‌ எதனோடும்‌ சேர்த்து எண்ணத்தகாத ஒரு தனிக்‌ குற்றமாகும்‌.


Parimelalagar

பற்றுள்ளம் என்னும் இவறன்மை . பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை; எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று; மிக்கது.
விளக்கம்:
(இவறலது தன்மையாவது: குணங்கள்எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு. ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள் ளும் எண்ணப்படுவ தொன்றன்று,
(என்றவாறு). இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படாதென்றது.