குறள் 439

குற்றங்கடிதல்

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

viyavatrka yenjgnyaanrum thannai nayavatrka
nanri payavaa vinai


Shuddhananda Bharati

Avoiding faults

Never boast yourself in any mood
Nor do a deed that does no good.


GU Pope

The Correction of Faults

Never indulge in self-complaisant mood,
Nor deed desire that yields no gain of good.

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.


Mu. Varadarajan

எக்காலத்திலும்‌ தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத்‌ தான்‌ விரும்பவும்‌ கூடாது.


Parimelalagar

எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நான்கு மதியாது ஒழிக; நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக.
விளக்கம்:
(தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும், அறனும் பொருளும் இகழப்படுதலானும், 'எஞ்ஞான்றும் வியவற்க' என்றும், 'கருதியது முடித்தே விடுவல்' என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின், அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) எல்லா நாளுந் தன்னைப் பொய்யனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும், அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யா தொழிக,
(என்றவாறு) செய்யிற் கெடு மென்றவாறாயிற்று.