Instability 34

331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

Lowest and meanest lore, that bids men trust secure,
In things that pass away, as things that shall endure!

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும்‌ புல்லறிவு உடையவராக இருத்தல்‌ வாழ்க்கையில்‌ இழிந்த நிலையாகும்‌.

That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).

பரிமேலழகர் உரை நில்லாதவற்றை நிலையின் என்று உணரும் புல்லறிவு ஆண்மை - நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடைய என்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை - துறந்தார்க்கு இழிபு.
விளக்கம்:
(தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடு எய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி, புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றுச்செய்வது சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும்,அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.)
மணக்குடவர் உரை நிலையாமையாவது மயக்கத்தினால் தானென்று நினைத்திருக்கின்ற யாக்கை யும் தனதென்று நினைத்திருக்கின்ற பொருளும் நிலை நில்லாமையைக் கூறல். (இதன் பொருள்)நில்லாத பொருள்களை நிலைநிற்பன வென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது,
(என்றவாறு). எனவே, பொருள்களை புள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று.
332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று

As crowds round dancers fill the hall, is wealth’s increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.

பெரிய செல்வம்‌ வந்து சேர்தல்‌, கூத்தாடுமிடத்தில்‌ கூட்டம்‌ சேர்வதைப்‌ போன்றது; அது நீங்கிப்‌ போதலும்‌ கூத்து முடிந்ததும்‌ கூட்டம்‌ கலைவதைப்‌ போன்றது.

The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.

பரிமேலழகர் உரை பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற் போலும்; போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும்.
விளக்கம்:
(பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. 'போக்கும்' என்ற எச்சஉம்மையான்வருதல் பெற்றாம்; அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின்கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித்தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல்திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக் கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்,
(என்றவாறு).
333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்

Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.

செல்வம்‌ நிலைக்காத இயல்பை உடையது; அத்தகைய செல்வத்தைப்‌ பெற்றால்‌, பெற்ற அப்பொழுதே நிலையான அறங்களைச்‌ செய்ய வேண்டும்‌.

Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.

பரிமேலழகர் உரை அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடையப்துச் செல்வம்; அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப் பெற்ற பொழுதே செய்க.
விளக்கம்:
('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழ் உள்வழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், 'அது பெற்றால்' என்றும், அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட்பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின், அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நில்லாத வியல்பை புடைத்துச் செல்வம், அதனைப் பெற்றால், அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க,
(என்றவாறு) நிலையாமை மூன்று வகைப்படும்; செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என.
334

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்

As ‘day’ it vaunts itself; well understood, ‘tis knife’,
That daily cuts away a portion from thy life.

வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப்‌ பெற்றால்‌, நாள்‌ என்பது ஒரு கால அளவுபோல்‌ காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும்‌ வாளாக உள்ளது.

Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.

பரிமேலழகர் உரை நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொருகாலவரையறை போலத் தன்னைக் காட்சி ஈர்ந்து செல்கின்ற வாளினது னாயது உயிர்; உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின்.
விளக்கம்:
(காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், 'நான் என ஒன்றுபோல் என்றும், அது தன்னை வாள் என்று உணர மாட்டாதார் தமக்குப்பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும், இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின், 'உணர்வார்ப் பெறின்' என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவே யாகலின், 'வாள்' என்பது ஆகுபெயர். இனி இதனை 'நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம்' என்று உரைப்பாரும் உளர்: 'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.)
மணக்குடவர் உரை (இ-ள் ) நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரை யீர்வதொரு வாளாம்; அதனை யறிவாரைப் பெறின், (எ - று ) இஃது உயிரீரும் என்றமையால், இளமை நிலையாமை கூறிற்று.
335

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும

Before the tongue lie powerless, ‘mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.

நாவை அடக்கி விக்கல்‌ மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்குமுன்‌) நல்ல அறச்செயல்‌ விரைந்து செய்யத்தக்கதாகும்‌.

Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.

பரிமேலழகர் உரை நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடாவண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும்.
விளக்கம்:
(மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும், 'வாராமுன்' என்றும், அதுதான் இன்ன பொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல், மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே , நல்வினையை மேல் விழுந்து செய்யவேண்டும்,
(என்றவாறு). இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.
336

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world.

நேற்று இருந்தவன்‌ ஒருவன்‌, இன்று இல்லாமல்‌ இறந்து போனான்‌ என்று சொல்லப்படும்‌ நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்‌.

This world possesses the greatness that one who yesterday was is not today.

பரிமேலழகர் உரை ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து - 'ஒருவன் நெருநல் உளனாயினான், அவனே இன்று இல்லையாயினான்' என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து; இவ்வுலகு - இவ்வுலகம்.
விளக்கம்:
(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப் பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து,
(என்றவாறு). இது யாக்கை நிலையாமை கூறிற்று.
337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

Who know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away!

அறிவில்லாதவர்‌ ஒருவேளையாவது வாழ்க்கையின்‌ தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை; ஆனால்‌ வீணில்‌ எண்ணுவனவோ ஒரு கோடியும்‌ அல்ல; மிகப்‌ பல எண்ணங்கள்‌.

Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.

பரிமேலழகர் உரை ஒரு பொழுதும் வாழ்வது அறியார் - ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தலை தெளியமாட்டார்; கோடியும் அல்ல பல கருதுப - மாட்டாது வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர் அறிவிலாதார்.
விளக்கம்:
(இழிவு சிறப்புஉம்மையால் பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று. பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும்அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்கி அப்பொருள் கடைக்கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனான் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனி, 'கருதுப' என்பதனை அஃறினைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒரு பொழுதளவும் தம்முயிர் நிலைநிற்கும் என்பதனை யறியாரா யிருந்தும், தமது வாழ்நாளைக் கோடியுமல்ல, பலவாகக்கருதுவர் உலகத்தார்,
(என்றவாறு) மேல் ஒருநாளுனானவன் பிற்றை ஞான்று செத்தானென்றார் ஈண்டு ஒருபொழுதளவும் உயிர் நிலையாகாது என்றார்.
338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு

Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share.

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான்‌ இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப்‌ பறவை பறந்தாற்‌ போன்றது.

The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.

பரிமேலழகர் உரை குடும்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து, உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு.
விளக்கம்:
('தனித்து ஒழிய' என்றதனான், முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும் ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய் நிற்றல்: அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள் உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும் உளவேனும்,புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு' என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப் போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தால் கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடும்பை' என்பதற்குக் கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன் தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல் உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கூடு தனியே கிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்; உடம் போடு உயிர்க்கு உள்ள நட்பு,
(என்றவாறு) மேல் ஒரு பொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைத்த பொழுது போமென்றார்.
339

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.

இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம்‌ வருதலைப்‌ போன்றது; பிறப்பு எனப்படுவது உறக்கம்‌ நீங்கி விழித்துக்‌ கொள்வதைப்‌ போன்றது.

Death is like sleep; birth is like awaking from it.

பரிமேலழகர் உரை சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் -அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு 'ஒக்கும்.
விளக்கம்:
(உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு ; உறங்கி விழிப்பதனோடு ஒக் கும் பிறப்பு,
(என்றவாறு). இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.
340

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home’s conclusive rest it knows?

(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில்‌ ஒரு மூலையில்‌ குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப்‌ புகுந்திருக்கும்‌ வீடு இதுவரையில்‌ அமையவில்லையோ?

It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.

பரிமேலழகர் உரை உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு; புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்!
விளக்கம்:
(அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினும் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின், பிறர் இல்களுல் துச்சிலிராது என்பதாம்; ஆகவே, உயிரோடு கூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவை ஏது பாட்டானும், முறையே யாக்கைகட்கு வரைந்த நாள் கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும, அவை ஓரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும் என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக் கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறிமாறி வருமாறும், அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டு கொள்க.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின், இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம். இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.


transliteration

nillaatha vatrrai nilaiyina yenrunarum
pullari vaanmai katai

kooththaatdu avaikkulaath thatrrae paerunjselvam
pokkum athuvilindh thatrru

atrkaa iyalpitrruch selvam athupaetrraal
atrkupa aangkae seyal

naalaena onrupotr kaatti uyireerum
vaalathu unarvaarp paerin

naachsetrru vikkulmael vaaraamun nalvinai
maetrsenru seiyap paduma

naerunal ulanoruvan inrillai yennum
paerumai utaiththuiv vulaku

orupoluthum vaalvathu ariyaar karuthupa
koatiyum alla pala

kudampai thaniththuoliyap pulparandh thatrrae
udampodu uyiritai natpu

urangku vathupolunj saakkaadu urangki
vilippathu polum pirappu

pukkil amaindhthinru kollo udampinul
thuchil irundhtha uyirkku