குறள் 337

நிலையாமை

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

orupoluthum vaalvathu ariyaar karuthupa
koatiyum alla pala


Shuddhananda Bharati

Instability

Man knows not his next moment
On crores of things he is intent.


GU Pope

Instability

Who know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away!

Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.


Mu. Varadarajan

அறிவில்லாதவர்‌ ஒருவேளையாவது வாழ்க்கையின்‌ தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை; ஆனால்‌ வீணில்‌ எண்ணுவனவோ ஒரு கோடியும்‌ அல்ல; மிகப்‌ பல எண்ணங்கள்‌.


Parimelalagar

ஒரு பொழுதும் வாழ்வது அறியார் - ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தலை தெளியமாட்டார்; கோடியும் அல்ல பல கருதுப - மாட்டாது வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர் அறிவிலாதார்.
விளக்கம்:
(இழிவு சிறப்புஉம்மையால் பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று. பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும்அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்கி அப்பொருள் கடைக்கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனான் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனி, 'கருதுப' என்பதனை அஃறினைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒரு பொழுதளவும் தம்முயிர் நிலைநிற்கும் என்பதனை யறியாரா யிருந்தும், தமது வாழ்நாளைக் கோடியுமல்ல, பலவாகக்கருதுவர் உலகத்தார்,
(என்றவாறு) மேல் ஒருநாளுனானவன் பிற்றை ஞான்று செத்தானென்றார் ஈண்டு ஒருபொழுதளவும் உயிர் நிலையாகாது என்றார்.