குறள் 338

நிலையாமை

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு

kudampai thaniththuoliyap pulparandh thatrrae
udampodu uyiritai natpu


Shuddhananda Bharati

Instability

The soul from body any day
Like bird from egg-shell flies away.


GU Pope

Instability

Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share.

The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.


Mu. Varadarajan

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான்‌ இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப்‌ பறவை பறந்தாற்‌ போன்றது.


Parimelalagar

குடும்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து, உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு.
விளக்கம்:
('தனித்து ஒழிய' என்றதனான், முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும் ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய் நிற்றல்: அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள் உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும் உளவேனும்,புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு' என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப் போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தால் கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடும்பை' என்பதற்குக் கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன் தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல் உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) கூடு தனியே கிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்; உடம் போடு உயிர்க்கு உள்ள நட்பு,
(என்றவாறு) மேல் ஒரு பொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைத்த பொழுது போமென்றார்.