குறள் 335

நிலையாமை

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும

naachsetrru vikkulmael vaaraamun nalvinai
maetrsenru seiyap paduma


Shuddhananda Bharati

Instability

Ere tongue benumbs and hiccough comes
Rise up to do good deeds betimes.


GU Pope

Instability

Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.

Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.


Mu. Varadarajan

நாவை அடக்கி விக்கல்‌ மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்குமுன்‌) நல்ல அறச்செயல்‌ விரைந்து செய்யத்தக்கதாகும்‌.


Parimelalagar

நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடாவண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும்.
விளக்கம்:
(மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும், 'வாராமுன்' என்றும், அதுதான் இன்ன பொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல், மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே , நல்வினையை மேல் விழுந்து செய்யவேண்டும்,
(என்றவாறு). இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.