குறள் 334

நிலையாமை

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்

naalaena onrupotr kaatti uyireerum
vaalathu unarvaarp paerin


Shuddhananda Bharati

Instability

The showy day is but a saw
Your life, know that, to file and gnaw.


GU Pope

Instability

As 'day' it vaunts itself; well understood, 'tis knife',
That daily cuts away a portion from thy life.

Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.


Mu. Varadarajan

வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப்‌ பெற்றால்‌, நாள்‌ என்பது ஒரு கால அளவுபோல்‌ காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும்‌ வாளாக உள்ளது.


Parimelalagar

நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொருகாலவரையறை போலத் தன்னைக் காட்சி ஈர்ந்து செல்கின்ற வாளினது னாயது உயிர்; உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின்.
விளக்கம்:
(காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், 'நான் என ஒன்றுபோல் என்றும், அது தன்னை வாள் என்று உணர மாட்டாதார் தமக்குப்பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும், இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின், 'உணர்வார்ப் பெறின்' என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவே யாகலின், 'வாள்' என்பது ஆகுபெயர். இனி இதனை 'நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம்' என்று உரைப்பாரும் உளர்: 'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.)


Manakkudavar

(இ-ள் ) நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரை யீர்வதொரு வாளாம்; அதனை யறிவாரைப் பெறின், (எ - று ) இஃது உயிரீரும் என்றமையால், இளமை நிலையாமை கூறிற்று.