The Greatness of Ascetics 3

21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

The settled rule of every code requires, as highest good,
Their greatness who, renouncing all, true to their rule have stood.

ஒழுக்கத்தில்‌ நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின்‌ பெருமையைச்‌ சிறந்ததாகப்‌ போற்றிக்‌ கூறுவதே நூல்களின்‌ துணிவாகும்‌.

The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.

பரிமேலழகர் உரை ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை;விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு-விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு.
விளக்கம்:
(தமக்கு உரிய ஒழுக்கத்தின்கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும் பிறவித் துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன் இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி, வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது, உண்டாக, மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும்; ஆகலான், இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுப்படக் கூறிய அதனான், ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது)
மணக்குடவர் உரை நீத்தார் பெருமையாவது துறந்த முனிவரது பெருமையைக் கூறல். இது கடவுளரை வணங்கினாற்போல் முனிவரையும் வணங்க வேண்டுமென் பதனானும் அவர் அதை யடக்கத்தக்கவரென்ற கருத்தினாலும் அவையிற்றின்பிற் கூறப்பட்டது. (இதன் பொருள்) ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும், (எ-று) யாதானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னையெல்லாருங் கொண்டாடு-தற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும்; அதனானே யானுஞ் சொல்லுகின் றேனென்பது.
22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

As counting those that from the earth have passed away,
‘Tis vain attempt the might of holy men to say.

பற்றுகளைத்‌ துறந்தவர்களின்‌ பெருமையை அளந்து கூறுதல்‌, உலகத்தில்‌ இதுவரையில்‌ பிறந்து இறந்தவர்களை எண்ணிக்‌ கணக்கிடுவதைப்‌ போன்றது.

To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.

பரிமேலழகர் உரை துறந்தார் பெருமை துணைக் கூறின் - இரு வகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையார் என அரியலுற்றாற் போலும்.
விளக்கம்:
(முடியாது என்பதாம். 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின், உலகத் துப் பிறந்திறந்தாரை இத்துணையரென்று எண்ணி யறியலுற்றாற் போலும்,
(என்றவாறு) இது பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.
23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

Their greatness earth transcends, who, way of both worlds weighed,
In this world take their stand, in virtue’s robe arrayed.

பிறப்பு வீடு என்பன போல்‌ இரண்டிரண்டாக உள்ளவைகளின்‌ கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின்‌ பெருமையே உலகத்தில்‌ உயர்ந்தது.

The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).

பரிமேலழகர் உரை இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று-உலகின்கண் உயர்ந்தது. ('தெரிமாண் தமிழ் மும்மைத்தென்னம்பொருப்பன்'
விளக்கம்:
(பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிகுந்தது என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறப்பும் வீடு மென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது. இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.
24

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

He, who with firmness, curb the five restrains,
Is seed for soil of yonder happy plains.

அறிவு என்னும்‌ கருவியினால்‌ ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக்‌ காக்க வல்லவன்‌, மேலான வீட்டிற்கு விதை போன்றவன்‌.

He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.

பரிமேலழகர் உரை உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலங்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.
விளக்கம்:
(இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந் நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந்தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகியவிடத்தே யாதற்கு இவ்விடத்தே யிருப்பதொரு வித்து,
(என்றவாறு). பெருமை சொல்லுவார் முற்பட்ட மக்கள் தன்மையனாய் இவ்வுலகின்கண் வாழ்பவனல்லன்; தேவருளொருவனென்று கூறினார்.
25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

Their might who have destroyed ‘the five’, shall soothly tell
Indra, the lord of those in heaven’s wide realms that dwell.

ஐந்து புலன்களாலாகும்‌ ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின்‌ தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்‌.

Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.

பரிமேலழகர் உரை ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று.
விளக்கம்:
(ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.).
மணக்குடவர் உரை (அ ள்.) நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று,
(என்றவாறு). இந்திரன் சான்றென்றது; இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலிய னென்றது.
26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

Things hard in the doing will great men do;
Things hard in the doing the mean eschew.

செய்வதற்கு அருமையான செயல்களைச்‌ செய்ய வல்லவரே பெரியோர்‌. செய்வதற்கு அரிய செயல்களைச்‌ செய்யமாட்டாதவர்‌ சிறியோர்‌.

The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.

பரிமேலழகர் உரை செயற்கு அரிய செய்வார் - பெரியர்-ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்; செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்ய மாட்டாதார் சிறியர்.
விளக்கம்:
(செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம், நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புக்கள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய "நாலிரு வழக்கின் தாபதபக்கம்" என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செயற்கு அரியன் செய்வாரைப் பெரியோரென்று சொல்லு வர்; அவற்றைச் செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர்,
(என்றவாறு). செயற்கரியன் - இயம நியம் முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமை யென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள் ளப்படார் ; செயற்கரியன் செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.
27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

Taste, light, touch, sound, and smell: who knows the way
Of all the five,- the world submissive owns his sway.

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்‌ என்று சொல்லப்படும்‌ ஐந்தன்‌ வகைகளையும்‌ ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில்‌ உள்ளது உலகம்‌.

The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.

பரிமேலழகர் உரை சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்.
விளக்கம்:
(அவற்றின் கூறுபாடு ஆவன: பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும்,கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவி ஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும், தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிரிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) சுவை முதலாகக் கூறிய வைத்து புலன்களின் வகையை யாராய் வான்கண்ண தே யுலகம்,
(என்றவாறு). எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே; அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான்கண்ண தா மென்றவா றாயிற்று.
28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

The might of men whose word is never vain,
The ‘secret word’ shall to the earth proclaim.

பயன்‌ நிறைந்த மொழிகளில்‌ வல்ல சான்றோரின்‌ பெருமையை, உலகத்தில்‌ அழியாமல்‌ விளங்கும்‌ அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்‌.

The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.

பரிமேலழகர் உரை நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும்.
விளக்கம்:
('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி. காட்டுதல்: பயனான் உணர்த்துதல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நிரம்பிய கல்வியையுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும்,
(என்றவாறு).இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.
29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

The wrath ‘tis hard e’en for an instant to endure,
Of those who virtue’s hill have scaled, and stand secure.

நல்ல பண்புகளாகிய மலையின்மேல்‌ ஏறிநின்ற பெரியோர்‌, ஒரு கணப்பொழுதே சினம்‌ கொள்வார்‌ ஆயினும்‌ அதிலிருந்து ஒருவரைக்‌ காத்தல்‌ அரிதாகும்‌.

The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

பரிமேலழகர் உரை குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; கணம் ஏயும் காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.
விளக்கம்:
(சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரேவழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின், 'கணம் ஏயும்' என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார் மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினான். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.
30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue’s sons the name of ‘Anthanar’ men give,

எல்லா உயிர்களிடத்திலும்‌ செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால்‌ அறவோரே அந்தணர்‌ எனப்படுவோர்‌ ஆவர்‌.

The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.

பரிமேலழகர் உரை எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர்.
விளக்கம்:
(பூணுதல், விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பக்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கள் மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண் டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர், (எ-று). மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருள்ரென்று கூறினார் ; இதனானே துற வாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.


transliteration

olukkaththu neeththaar paerumai viluppaththu
vaendum panuval thunivu

thurandhthaar paerumai thunaikkoorin vaiyaththu
irandhthaarai yennikkon datrru

irumai vakaithaerindhthu eenduaram poontaar
paerumai pirangkitrru ulaku

uranaennum thottiyaan oaraindhthum kaappaan
varanaennum vaippitrkoar viththu

aindhthaviththaan aatrral akalvisumpu laarkoamaan
indhthiranae saalung kari

seyatrkariya seivaar paeriyachiiriyar seyatrkariya
seyatrkariya seikalaa thaar

suvaioli ooruoasai naatrramaena aindhthin
vakaithaerivaan kattae ulaku

niraimoli maandhthar paerumai nilaththu
maraimoli kaatti vidum

kunamaennum kunraeri ninraar vaekuli
kanamaeyum kaaththal arithu

andhthanar yenpor aravormatr raevvuyirkkum
sendhthanmai poondoluka laan