குறள் 25

நீத்தார் பெருமை

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

aindhthaviththaan aatrral akalvisumpu laarkoamaan
indhthiranae saalung kari


Shuddhananda Bharati

The merit of Ascetics

Indra himself has cause to say
How great the power ascetics' sway.


GU Pope

The Greatness of Ascetics

Their might who have destroyed 'the five', shall soothly tell
Indra, the lord of those in heaven's wide realms that dwell.

Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.


Mu. Varadarajan

ஐந்து புலன்களாலாகும்‌ ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின்‌ தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்‌.


Parimelalagar

ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று.
விளக்கம்:
(ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.).


Manakkudavar

(அ ள்.) நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று,
(என்றவாறு). இந்திரன் சான்றென்றது; இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலிய னென்றது.