குறள் 30

நீத்தார் பெருமை

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

andhthanar yenpor aravormatr raevvuyirkkum
sendhthanmai poondoluka laan


Shuddhananda Bharati

The merit of Ascetics

With gentle mercy towards all,
The sage fulfils the vitue's call.


GU Pope

The Greatness of Ascetics

Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue's sons the name of 'Anthanar' men give,

The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.


Mu. Varadarajan

எல்லா உயிர்களிடத்திலும்‌ செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால்‌ அறவோரே அந்தணர்‌ எனப்படுவோர்‌ ஆவர்‌.


Parimelalagar

எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர்.
விளக்கம்:
(பூணுதல், விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பக்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கள் மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.


Manakkudavar

(இதன் பொருள்) எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண் டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர், (எ-று). மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருள்ரென்று கூறினார் ; இதனானே துற வாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.