குறள் 23

நீத்தார் பெருமை

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

irumai vakaithaerindhthu eenduaram poontaar
paerumai pirangkitrru ulaku


Shuddhananda Bharati

The merit of Ascetics

No lustre can with theirs compare
Who know the right and virtue wear.


GU Pope

The Greatness of Ascetics

Their greatness earth transcends, who, way of both worlds weighed,
In this world take their stand, in virtue's robe arrayed.

The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).


Mu. Varadarajan

பிறப்பு வீடு என்பன போல்‌ இரண்டிரண்டாக உள்ளவைகளின்‌ கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின்‌ பெருமையே உலகத்தில்‌ உயர்ந்தது.


Parimelalagar

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று-உலகின்கண் உயர்ந்தது. ('தெரிமாண் தமிழ் மும்மைத்தென்னம்பொருப்பன்'
விளக்கம்:
(பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிகுந்தது என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறப்பும் வீடு மென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது. இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.