குறள் 21

நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

olukkaththu neeththaar paerumai viluppaththu
vaendum panuval thunivu


Shuddhananda Bharati

The merit of Ascetics

No merit can be held so high
As theirs who sense and self deny.


GU Pope

The Greatness of Ascetics

The settled rule of every code requires, as highest good,
Their greatness who, renouncing all, true to their rule have stood.

The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.


Mu. Varadarajan

ஒழுக்கத்தில்‌ நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின்‌ பெருமையைச்‌ சிறந்ததாகப்‌ போற்றிக்‌ கூறுவதே நூல்களின்‌ துணிவாகும்‌.


Parimelalagar

ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை;விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு-விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு.
விளக்கம்:
(தமக்கு உரிய ஒழுக்கத்தின்கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும் பிறவித் துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன் இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி, வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது, உண்டாக, மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும்; ஆகலான், இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுப்படக் கூறிய அதனான், ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது)


Manakkudavar

நீத்தார் பெருமையாவது துறந்த முனிவரது பெருமையைக் கூறல். இது கடவுளரை வணங்கினாற்போல் முனிவரையும் வணங்க வேண்டுமென் பதனானும் அவர் அதை யடக்கத்தக்கவரென்ற கருத்தினாலும் அவையிற்றின்பிற் கூறப்பட்டது. (இதன் பொருள்) ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும், (எ-று) யாதானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னையெல்லாருங் கொண்டாடு-தற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும்; அதனானே யானுஞ் சொல்லுகின் றேனென்பது.