Not coveting another’s Wife 15

141

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்

Who laws of virtue and possession’s rights have known,
Indulge no foolish love of her by right another’s own.

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும்‌ அறியாமை, உலகத்தில்‌ அறமும்‌ பொருளும்‌ ஆராய்ந்து கண்டவரிடம்‌ இல்லை.

The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

பரிமேலழகர் உரை பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை-பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை; ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல்-ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள்நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை.
விளக்கம்:
மணக்குடவர் உரை பிறனில் விழையாமையாவது பிறனுடைய மனையாளது தோள் நலம் விரும்பாமை. (இதன் பொருள்) பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பியொழுகுகின்ற அறி யாமை, உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்,
(என்றவாறு).
142

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்

No fools, of all that stand from virtue’s pale shut out,
Like those who longing lurk their neighbour’s gate without.

அறத்தை விட்டுத்‌ தீநெறியில்‌ நின்றவர்‌ எல்லாரிலும்‌ பிறன்‌ மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில்‌ சென்று நின்றவரைப்‌ போல்‌ அறிவிலிகள்‌ இல்லை.

Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour’s door.

பரிமேலழகர் உரை அறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்-பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை.
விளக்கம்:
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப்போல் அறியாதாரில்லை,
(என்றவாறு).
143

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார்

They’re numbered with the dead, e’en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise.

ஐயமில்லாமல்‌ தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம்‌ கொண்டு தீமையைச்‌ செய்து நடப்பவர்‌, செத்தவரைவிட வேறுபட்டவர்‌ அல்லர்‌.

Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.

பரிமேலழகர் உரை மன்ற தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார்-தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார்; விளிந்தாரின் வேறு அல்லர்-உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர்.
விளக்கம்:
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி , ஒழுகுவார் மெய்யாக, செத்தாரின் வேறல்லர்,
(என்றவாறு) இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின், பிணத்தோ டொப்பரென்றது.
144

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்

How great soe’er they be, what gain have they of life,
Who, not a whit reflecting, seek a neighbour’s wife.

தினையளவும்‌ ஆராய்ந்து பார்க்காமல்‌ பிறனுடைய மனைவியிடம்‌ செல்லுதல்‌, எவ்வளவு பெருமையை உடையவராயினும்‌ என்னவாக முடியும்‌?

However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?

பரிமேலழகர் உரை எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினம் ஒருவர்க்கு யாதாய் முடியும்; தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகல் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல்.
விளக்கம்:
(இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார். "என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்" (கலித்.பாலை.6) என்புழிப்போல, உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எல்லாவமைதியினையும் உடையராயினும், தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதாய்ப் பயக்குமோ ?
(என்றவாறு). பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமு மிழியுமென்று கூறினார்.
145

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

‘Mere triflel’ saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.

இச்‌ செயல்‌ எளியது என எண்ணிப்‌ பிறனுடைய மனைவியிடம்‌ நெறிதவறிச்‌ செல்கின்றவன்‌, எப்போதும்‌ அழியாமல்‌ நிலைநிற்கும்‌ பழியை அடைவான்‌.

He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

பரிமேலழகர் உரை எளிது என இல் இறப்பான்-'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான்; விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும்-மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.
விளக்கம்:
(இல்லின்கண் இறத்தல்-இல்லான்கண் நெறிகடந்து சேறல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின்கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்,
(என்றவாறு). இது பழியுண்டா மென்றது.
146

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

Who home ivades, from him pass nevermore,
Hatred and sin, fear, foul disgrace; these four.

பகை பாவம்‌ அச்சம்‌ பழி என்னும்‌ இந்நான்கு குற்றங்களும்‌ பிறன்‌ மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்‌.

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour’s wife.

பரிமேலழகர் உரை இல் இறப்பான்கண் பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து; பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம்-பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் 'நீங்காவாம்,
விளக்கம்:
(எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்; பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு,
(என்றவாறு).
147

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்

Who sees the wife, another’s own, with no desiring eye
In sure domestic bliss he dwelleth ever virtuously.

அறத்தின்‌ இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன்‌, பிறனுக்கு உரிமையானவளின்‌ பெண்‌ தன்மையை விரும்பாதவனே.

He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.

பரிமேலழகர் உரை அறன் இயலான் இல்வாழ்வான் என்பான்-அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்; பிறன் இயலாள் பெண்மை நயவாதவன்-பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன்.
விளக்கம்:
(ஆண் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறநெறியானே யில் வாழ்வானென்று சொல்லப்படுவான், பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன்,
(என்றவாறு). இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.
148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு

Manly excellence, that looks not on another’s wife,
Is not virtue merely, ‘tis full ‘propriety’ of life.

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம்‌ மட்டும்‌ அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்‌.

That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.

பரிமேலழகர் உரை பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை; சான்றோர்க்கு அறன் ஒன்றே ஆன்ற ஒழுக்கு-சால்புடையார்க்கு அறனும் ஆம்; நிரம்பிய ஒழுக்கமும் ஆம். புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார்.
விளக்கம்:
('ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மைதானே, சான் - றோர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம்,
(என்றவாறு). இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமு மென்றது.
149

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்

Who ‘re good indeed, on earth begirt by ocean’s gruesome tide?
The men who touch not her that is another’s bride.

கடல்‌ சூழ்ந்த உலகத்தில்‌ நன்மைக்கு உரியவர்‌ யார்‌ என்றால்‌ பிறனுக்கு உரிமையானவளின்‌ தோளைப்‌ பொருந்தாதவரே ஆவர்‌.

Is it asked, “who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?” Those who touch not the shoulder of her who belongs to another.

பரிமேலழகர் உரை நாம நீர் வைப்பின்-அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின்-எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின்; பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார்-பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார்.
விளக்கம்:
(அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக் குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நலத்துக்கு உரியார் யாரெனின், நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார்,
(என்றவாறு), நலக்குரியார் - விரும்புதற்குரியார்.
150

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

Though virtue’s bounds he pass, and evil deeds hath wrought;
At least, ‘tis good if neighbour’s wife he covet not.

ஒருவன்‌ அறநெறியில்‌ நிற்காமல்‌ அறமில்லாதவைகளைச்‌ செய்தாலும்‌, பிறனுக்கு உரியவளின்‌ பெண்மையை விரும்பாமல்‌ வாழ்தல்‌ நல்லது.

Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.

பரிமேலழகர் உரை அறன் வரையான் அல்ல செயினும்-ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று-அவனுக்குப் பிறன் எல்லைகண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று.
விளக்கம்:
(இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன்இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறத்தை வரையாதே அறமல்லா தன செய்யினும், பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று,
(என்றவாறு). இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.


transliteration

piranporulaal paetdolukum paethaimai gnyaalaththu
aramporul kantaarkan il

arankatai ninraarul yellaam pirankatai
ninraarin paethaiyaar il

vilindhthaarin vaerallar manra thaelindhthaaril
theemai purindhthuoluku vaar

yenaiththunaiyar aayinum yennaam thinaiththunaiyum
thaeraan piranil pukal

yelithaena illirappaan yeithumaenj gnyaanrum
viliyaathu nitrkum pali

pakaipaavam achcham paliyaena naankum
ikavaavaam illirappaan kan

araniyalaan ilvaalvaan yenpaan piraniyalaal
paenmai nayavaa thavan

piranmanai nokkaatha paeraanmai saannorkku
aranonno aanra volukku

nalakkuriyaar yaaraenin naamaneer vaippin
pirarkkuriyaal tholthoyaa thaar

aranvaraiyaan alla seyinum piranvaraiyaal
paenmai nayavaamai nanru