குறள் 144

பிறனில் விழையாமை

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்

yenaiththunaiyar aayinum yennaam thinaiththunaiyum
thaeraan piranil pukal


Shuddhananda Bharati

Against coveting another's wife

Their boasted greatness means nothing
When to another's wife they cling.


GU Pope

Not coveting another's Wife

How great soe'er they be, what gain have they of life,
Who, not a whit reflecting, seek a neighbour's wife.

However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?


Mu. Varadarajan

தினையளவும்‌ ஆராய்ந்து பார்க்காமல்‌ பிறனுடைய மனைவியிடம்‌ செல்லுதல்‌, எவ்வளவு பெருமையை உடையவராயினும்‌ என்னவாக முடியும்‌?


Parimelalagar

எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினம் ஒருவர்க்கு யாதாய் முடியும்; தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகல் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல்.
விளக்கம்:
(இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார். "என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்" (கலித்.பாலை.6) என்புழிப்போல, உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) எல்லாவமைதியினையும் உடையராயினும், தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதாய்ப் பயக்குமோ ?
(என்றவாறு). பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமு மிழியுமென்று கூறினார்.