Complainings 117

1161

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்

I would my pain conceal, but see! it surging swells,
As streams to those that draw from ever-springing wells.

இக்‌ காமநோயைப்‌ பிறர்‌ அறியாமல்‌ யான்மறைப்பேன்‌; ஆனால்‌,இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர்‌ மிகுவது போல்‌ மிகுகின்றது.

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.

பரிமேலழகர் உரை 'காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது', என்ற தோழிக்குச் சொல்லியது. நோயை யான் மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகு‘மறு போல மிகாநின்றது.
விளக்கம்:
('அம்மறைத்தலால் பயன் என்?' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. ''இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்'' என்புழிப்போல, ஈண்டு சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை' என்று பாடம் ஓதுவாரும் உளர்; அடு பாடமின்மை அறிக. 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும்' என்பதாம்.)
மணக்குடவர் உரை படர்மெலிந்திரங்கலாவது தலைமகள் தலைமகன் பிரிந்துழிக் கதுமென உற்ற துன்பத்தினால் மெலிந்திரங்குதல். பிரிந்துழியுற்ற துன்பமாவது போனா னென்று கேட்ட காலத்து வருவதோர் மனநிகழ்ச்சி. இது பிரியப்பட்டார்க்கு முற்பாடு தோன்றுமாதலான், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) இந் நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும், இஃது இறைப்பார்க்கு ஊற்று நீர் போல மிகாநின்றது,
(என்றவாறு). தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகா தென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
1162

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

I cannot hide this pain of mine, yet shame restrains
When I would tell it out to him who caused my pains.

இக்‌ காமநோயைப்‌ பிறர்‌ அறியாமல்‌ முற்றிலும்‌ மறைக்கவும்‌ முடியவில்லை; நோய்‌ செய்த காதலர்க்குச்‌ சொல்வதும்‌ நாணம்‌ தருகின்றது.

I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.

பரிமேலழகர் உரை 'ஈண்டையார் அறியாமல் மறைத்தல், ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது.) இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன் - இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது; இனி என் செய்கோ?
விளக்கம்:
(ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பத பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத்தரும்' என்றும் கூறினாள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன்; இந்நோயைச் செய் தார்க்குச் சொல்லவும் நாணயாக நின்றது,
(என்றவாறு). இது குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது,
1163

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து

My soul, like porter’s pole, within my wearied frame,
Sustains a two-fold burthen poised, of love and shame.

துன்பத்தைப்‌ பொறுக்காமல்‌ வருந்துகின்ற என்‌ உடம்பினிடத்தில்‌ உயிரே காவடித்தண்டாகக்‌ கொண்டு காமநோயும்‌ நாணமும்‌ இருபக்கமும்‌ தொங்குகின்றன.

(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.

பரிமேலழகர் உரை இதுவும் அது. காமமும் நாணும் - காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்; நோனா என் உடம்பின அகத்து - தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும் - உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன.
விளக்கம்:
(பொறாமை மெலிவானாயது. 'தூங்கும்' என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. 'தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன; பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று, (எ - று.) இது தலைமகள் மனநிகழ்ச்சி யிதுவென்று கூறியது.
1164

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்

A sea of love, ‘tis true, I see stretched out before,
But not the trusty bark that wafts to yonder shore.

காமநோயாகிய கடல்‌ இருக்கின்றது; ஆனால்‌, அதை நீந்திக்‌ கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.

There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.

பரிமேலழகர் உரை 'தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்ற புணையான் நீந்திக் கடப்பார்' என்ற தோழிக்குச் சொல்லியது. உண்டு காமக்கடலே - யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை இல் - அதனை நீந்தும் அரணாகிய புனை இல்லை.
விளக்கம்:
(இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும் ஆயிற்றிலை'' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காமக்கடல் நிலையாக உண்டே , அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே,
(என்றவாறு). இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லை யெனத் தலைமகள் கூறியது.
1165

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்

Who work us woe in friendship’s trustful hour,
What will they prove when angry tempests lower?

(இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச்செய்ய வல்லவர்‌,துன்பம்‌ தரும்‌ பகையை வெல்லும்‌) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரே?

He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?

பரிமேலழகர் உரை தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் - இன்பஞ்செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச் செய்ய வல்லவர்; துப்பின் எவனாவர் கொல் - துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ?
விளக்கம்:
(துப்புப் பகையுமாதல், ''துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன்'' நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை யண்மையன்'' (புறநா.80) என்பதனானும் அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின், 'அவர் செய்வது அறியப் பெற்றிலேம்' என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. துயர் வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர் வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினாள்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மென்மை செய்ய வேண்டும் நட்டோர்மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர், வன்மை செய்ய வேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய்கின்றாரோ? இது பகை தணி வினையின்கண் பிரிந்த தலைமகனது கொடுமையை உட் கொண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
1166

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது

A happy love’s sea of joy; but mightier sorrows roll
From unpropitious love athwart the troubled soul.

காமம்‌ மகிழ்விக்கும்போது அதன்‌ இன்பம்‌ கடல்‌ போன்றது; அது வருத்தும்போது அதன்‌ துன்பமோ கடலைவிடப்‌ பெரியது.

The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.

பரிமேலழகர் உரை 'காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம் கடல்போலப் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - இனி அது தானே பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம்.
விளக்கம்:
('மற்று' வினை மாற்றிக்கண் வந்தது. 'அடுங்கால்' என வந்தமையின், மறுதலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்துவரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காமப்புணர்வினால் நமக்கு வரும் இன்பம் கடல்போலப் பெரிது; பிரிவினான், அஃது அடுங்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது, (எ-று). இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்றுவித்த தோழிக்கு ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது.
1167

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்

I swim the cruel tide of love, and can no shore descry,
In watches of the night, too, ‘mid the waters, only I!

காமம்‌ என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும்‌ அதன்‌ கரையை யான்‌ காணவில்லை; நள்ளிரவிலும்‌ யான்‌ தனியே இருக்கின்றேன்.

Ihave swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.

பரிமேலழகர் உரை 'காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்,' என்றாட்குச் சொல்லியது. காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன்; நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று; இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றியானேயாயினேன்; ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளனாகாநின்றேன்; ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென்
விளக்கம்:
(கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. 'யானே ஆயினேன்' என்பது 'நீ துணையாயிற்றிலை' என்னும் குறிப்பிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன்; அறையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன், மற்று உறங்காதாரில்லை. இது காதலர் குறித்த நாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலை மகள் தன்னுள்ளே சொல்லியது.
1168

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை

All living souls in slumber soft she steeps;
But me alone kind night for her companing keeps!

இந்த இராக்காலம்‌ இரங்கத்தக்கது; எல்லா உயிரையும்‌ தூங்கச்‌ செய்துவிட்டு என்னை அல்லாமல்‌ வேறு துணை இல்லாமலிருக்கின்றது.

The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.

பரிமேலழகர் உரை இரவின் கொடுமை சொல்லி இரங்கியது. இரா அளித்து - இரா அளித்தாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என்னல்லது துணை இல்லை - உலகத்து நிலை பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப் பண்ணுதலான், என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை.
விளக்கம்:
('துயிற்றி' எனத் திரிந்துநின்ற வினையெச்சம் அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. 'துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக் கோடலின், அறிவின்று' என்பது பற்றி, 'அளித்து' என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இவ்விரா அளித்தா யிருந்தது; உலகத்து வாழ்கின்ற உயிர்க ளெல்லாவற்றையும் துயிலப்பண்ணி, என்னையல்லது வேறுதுணை யில்லையாக இருந்தது,
(என்றவாறு), இது பிற்றை ஞான்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கண் உறங்கு கின்றதில்லை யென்று சொல்லியது.
1169

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா

More cruel than the cruelty of him, the cruel one,
In these sad times are lengthening hours of night I watch alone.

(பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில்‌ நெடுநேரம்‌ உடையனவாய்க்‌ கழிகின்ற இராக்காலங்கள்‌, பிரிந்த கொடியவரின்‌ கொடுமையைவிடத்‌ தாம்‌ கொடியவை.

The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.

பரிமேலழகர் உரை இதுவும் அது. இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யா நின்ற.
விளக்கம்:
(தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல் அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கொடியவர் செய்த கொடுமையிலும் தாம் கொடியவைாய் நின்றன; இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்,
(என்றவாறு). இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைகள் தோழிக்குச் சொல்லியது.
1170

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்

When eye of mine would as my soul go forth to him,
It knows not how through floods of its own tears to swim.

காதலர்‌ உள்ள இடத்திற்கு என்‌ மனத்தைப்போல்‌ செல்ல முடியுமானால்‌, என்‌ கண்கள்‌ இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில்‌ நீந்த வேண்டியதில்லை.

Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.

பரிமேலழகர் உரை
விளக்கம்:
(அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனோடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.)
மணக்குடவர் உரை (இ-ள்.) அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லன வாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா. (
(என்றவாறு). இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது.


transliteration

maraippaenman yaanikhtho noyai iraippavarkku
ootrruneer pola mikum

karaththalum aatrraenindh noyainoi seithaarkku
uraiththalum naanuth tharum

kaamamum naanum uyirkaavaath thoongkumyen
nonaa udampin akaththu

kaamak kadalmannum untae athuneendhthum
yaemap punaimannum il

thuppin yevanaavar mankol thuyarvaravu
natpinul aatrru pavar

inpam kadalmatrruk kaamam akhthadungkaal
thunpam athanitr paerithu

kaamak kadumpunal neendhthik karaikaanaen
yaamaththum yaanae ulaen

mannuyir yellaam thuyitrri aliththiraa
yennallathu illai thunai

kotiyaar kodumaiyin thaamkotiya indhnaal
naetiya kaliyum iraa

ullamponru ulvalich selkitrpin vaellaneer
neendhthala mannoyen kan