குறள் 1168

படர்மெலிந்திரங்கல்

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை

mannuyir yellaam thuyitrri aliththiraa
yennallathu illai thunai


Shuddhananda Bharati

Wailing of pining love

Night's mercy lulls all souls to sleep
Keeping but me for companionship.


GU Pope

Complainings

All living souls in slumber soft she steeps;
But me alone kind night for her companing keeps!

The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.


Mu. Varadarajan

இந்த இராக்காலம்‌ இரங்கத்தக்கது; எல்லா உயிரையும்‌ தூங்கச்‌ செய்துவிட்டு என்னை அல்லாமல்‌ வேறு துணை இல்லாமலிருக்கின்றது.


Parimelalagar

இரவின் கொடுமை சொல்லி இரங்கியது. இரா அளித்து - இரா அளித்தாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என்னல்லது துணை இல்லை - உலகத்து நிலை பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப் பண்ணுதலான், என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை.
விளக்கம்:
('துயிற்றி' எனத் திரிந்துநின்ற வினையெச்சம் அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. 'துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக் கோடலின், அறிவின்று' என்பது பற்றி, 'அளித்து' என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு.)


Manakkudavar

(இதன் பொருள்) இவ்விரா அளித்தா யிருந்தது; உலகத்து வாழ்கின்ற உயிர்க ளெல்லாவற்றையும் துயிலப்பண்ணி, என்னையல்லது வேறுதுணை யில்லையாக இருந்தது,
(என்றவாறு), இது பிற்றை ஞான்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கண் உறங்கு கின்றதில்லை யென்று சொல்லியது.