குறள் 1167

படர்மெலிந்திரங்கல்

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்

kaamak kadumpunal neendhthik karaikaanaen
yaamaththum yaanae ulaen


Shuddhananda Bharati

Wailing of pining love

Wild waves of love I swim shoreless
Pining alone in midnight hush.


GU Pope

Complainings

I swim the cruel tide of love, and can no shore descry,
In watches of the night, too, 'mid the waters, only I!

Ihave swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.


Mu. Varadarajan

காமம்‌ என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும்‌ அதன்‌ கரையை யான்‌ காணவில்லை; நள்ளிரவிலும்‌ யான்‌ தனியே இருக்கின்றேன்.


Parimelalagar

'காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்,' என்றாட்குச் சொல்லியது. காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன்; நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று; இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றியானேயாயினேன்; ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளனாகாநின்றேன்; ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென்
விளக்கம்:
(கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. 'யானே ஆயினேன்' என்பது 'நீ துணையாயிற்றிலை' என்னும் குறிப்பிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன்; அறையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன், மற்று உறங்காதாரில்லை. இது காதலர் குறித்த நாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலை மகள் தன்னுள்ளே சொல்லியது.