Penance 27

261

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

To bear due penitential pains, while no offence
He causes others, is the type of ‘penitence’.

தான்‌ பெற்ற துன்பத்தைப்‌ பொறுத்தலும்‌ மற்ற உயிர்களுக்குத்‌ துன்பம்‌ செய்யாதிருத்தலும்‌ ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்‌.

The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.

பரிமேலழகர் உரை தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே-உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று.
விளக்கம்:
(மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' என்பதனை, 'யானைக்குக் கோடு கூரிது' என்றார்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம். இதனான் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.) --
மணக்குடவர் உரை தவமாவது ஊணும் உறக்கமும் குறைத்தலும், வெயிலும் பனியும் தாங் கலும், தேவர் வழிபாடு முதலாயினவும் மேற்கொண்டு முயறல். (இதன் பொருள்) தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய்செய் யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்,
(என்றவாறு).
262

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது

To ‘penitents’ sincere avails their ‘penitence’;
Where that is not, ‘tis but a vain pretence.

தவக்கோலமும்‌ தவஒழுக்கம்‌ உடையவர்க்கே பொருத்தமாகும்‌; அக்கோலத்தைத்‌ தவஒழுக்கம்‌ இல்லாதவர்‌ மேற்கொள்வது வீண்முயற்சியாகும்‌.

Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now).

பரிமேலழகர் உரை தவமும் தவம் உடையார்க்கு ஆகும்-பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே; அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம்-ஆகலான், அத்தவத்தை அம் முன்தவம் இல்லாதார் முயல்வது பயன்இல் முயற்சியாம்.
விளக்கம்:
(பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந் நல் வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை,
(என்றவாறு). இது தவமிலார்க்குத் தவம் வாராது; வரினுந் தப்பு மென்றது.
263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்

Have other men forgotten ‘penitence’ who strive
To earn for penitents the things by which they live?

துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ வேண்டும்‌ என விரும்பி மற்றவர்கள்‌ (இல்லறத்தினர்‌) தவம்‌ செய்வதை மறந்தார்களோ?

It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?

பரிமேலழகர் உரை மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும்!
விளக்கம்:
(துப்புரவு - அனுபவிக்கப்படுவன. ''வேண்டியாங்கு எய்தற்" பயத்தது ஆகலின் (குறள் 265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும் எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தா ராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை,
(என்றவாறு). இது தானத்தினும் தவம் மிகுதியுடைத்தென்றது.
264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

Destruction to his foes, to friends increase of joy.
The ‘penitent’ can cause, if this his thoughts employ.

தீமை செய்யும்‌ பகைவரை அடக்குதலும்‌, நன்மை செய்யும்‌ நண்பரை உயர்த்துதலும்‌ நினைத்த அளவில்‌ தவத்தின்‌ வலிமையால்‌ உண்டாகும்‌.

If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities.

பரிமேலழகர் உரை ஒன்னார்த் தெறலும் - அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும்; உவந்தாரை ஆக்கலும் - அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும்; எண்ணின் தவத்தான் வரும் - தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம்.
விளக்கம்:
(முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இவ்விடத்துப் பகைவரைத் தெறுதலும், நட்டோரையாக்குதலு மாகிய வலி ஆராயின், முன்செய்த தவத்தினாலே வரும்,
(என்றவாறு). இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது
265

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

That what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful ‘penance’ done.

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால்‌ செய்யத்தக்க தவம்‌ இந்நிலையிலும்‌ (இல்லற வாழ்க்கையிலும்‌) முயன்று செய்யப்படும்‌.

Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come).

பரிமேலழகர் உரை வேண்டிய வேண்டியாங்கு எய்தலால்-முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம். ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம். இம்மைக்கண் அறிவடையோரான் முயலப்படும்.
விளக்கம்:
('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) விரும்பியன விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை யிவ் விடத்தே முயல வேண்டும்,
(என்றவாறு). இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
266

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

Who works of ‘penance’ do, their end attain,
Others in passion’s net enshared, toil but in vain.

தவம்‌ செய்கின்றவரே தமக்குரிய கடமைகளைச்‌ செய்கின்றவர்‌ ஆவர்‌; அவர்‌ அல்லாத மற்றவர்‌ ஆசை வலையில்‌ அகப்பட்டு வீண்முயற்சி செய்கின்றவரே.

Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).

பரிமேலழகர் உரை தம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம் செய்வாராவர் துறந்து தவத்தைச் செய்வார்; மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார்.
விளக்கம்:
(அநித்தமாய் மூவகைத் துன்பத்தாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்திவருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தங்கருமஞ் செய்வார் தவஞ் செய்வார்; அஃதல்லாதன செய்வா ரெல்லாம் ஆசையிலே யகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார்,
(என்றவாறு). இது தவம் பண்ண வேண்டுமென்றது.
267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

The hotter glows the fining fire, the gold the brighter shines;
The pain of penitence, like fire, the soul of man refines.

புடமிட்டுச்‌ சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப்‌ போல்‌, தவம்‌ செய்கின்றவரைத்‌ துன்பம்‌ வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்‌.

Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities).

பரிமேலழகர் உரை சுடச்சுடரும் பொன் போல்-தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளிமிகுமாறு போல; நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும்-தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.
விளக்கம்:
('சுடச்சுடரும் பொன் போல' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போல், துன்பம் நலிய நலியத் தவஞ் செய்வார்க்குத் தம்மோடு மருவின் வினை விட்டு ஒளிவிடும்,
(என்றவாறு). இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.
268

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

Who gains himself in utter self-control,
Him worships every other living soul.

தவவலிமையால்‌ தன்னுடைய உயிர்‌ தான்‌ என்னும்‌ பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள்‌ எல்லாம்‌ (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்‌.

All other creatures will worship him who has attained the control of his own soul.

பரிமேலழகர் உரை தன் உயிர் தான் அறப் பெற்றானை-தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை; ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும்.
விளக்கம்:
(தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட்பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப் பெற்ற வனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும்,
(என்றவாறு). உயிரென்றது சலிப்பற்ற அறிவை ; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறு தலாவது அகங்கார மறு தல்.
269

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

E’en over death the victory he may gain,
If power by penance won his soul obtain.

தவம்‌ செய்வதால்‌ பெறத்தக்க ஆற்றலைப்‌ பெற்றவர்க்கு (ஓர்‌ இடையூறும்‌ இல்லையாகையால்‌) யமனை வெல்லுதலும்‌ கைகூடும்‌.

Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death).

பரிமேலழகர் உரை கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்; நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு.
விளக்கம்:
(சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைக்கூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கூற்றத்தைத் தப்புதலுங் கை கூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு,
(என்றவாறு). இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல் வென்றது.
270

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

The many all things lack! The cause is plain,
The ‘penitents’ are few. The many shun such pain.

ஆற்றல்‌ இல்லாதவர்‌ பலராக உலகில்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌, தவம்‌ செய்கின்றவர்‌ சிலராகவும்‌ செய்யாதவர்‌ பலராகவும்‌ இருப்பதே ஆகும்‌.

Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.

பரிமேலழகர் உரை இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின்; நோற்பார் சிலர் நோலாதவர் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்.
விளக்கம்:
(செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன; என்னை? "நுண்ணுணர்வு இன்மை வறுமை; அஃதுடைமை, பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்" (நாலடி. 251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப் பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம், தவஞ் செய்வார் சிலராதல்; அது செய்யாதார் பலராதல்,
(என்றவாறு)


transliteration

utrranoi nonral uyirkkurukan seiyaamai
atrrae thavaththitr kuru

thavamum thavamutaiyaarkku aakum athanai
akhthilaar maetrkol vathu

thurandhthaarkkuth thuppuravu vaenti marandhthaarkol
matrrai yavarkal thavam

onnaarth thaeralum uvandhthaarai aakkalum
yennin thavaththaan varum

vaentiya vaentiyaang keithalaal seithavam
eendu muyalap padum

thavanjseivaar thangkarumanj seivaarmatr rallaar
avanjseivaar aasaiyut patdu

sudachsudarum ponpol olividum thunpanj
sudachsuda notrkitr pavarkku

thannuyir thaanarap paetrraanai yaenaiya
mannuyi raellaandh tholum

kootrram kuthiththalum kaikoodum notrralin
aatrral thalaippat davarkku

ilarpala raakiya kaaranam notrpaachiilarpalar
notrpaachiilarpalar nolaa thavar