குறள் 262

தவம்

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது

thavamum thavamutaiyaarkku aakum athanai
akhthilaar maetrkol vathu


Shuddhananda Bharati

Penance

Penance is fit for penitents
Not for him who in vain pretends.


GU Pope

Penance

To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'tis but a vain pretence.

Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now).


Mu. Varadarajan

தவக்கோலமும்‌ தவஒழுக்கம்‌ உடையவர்க்கே பொருத்தமாகும்‌; அக்கோலத்தைத்‌ தவஒழுக்கம்‌ இல்லாதவர்‌ மேற்கொள்வது வீண்முயற்சியாகும்‌.


Parimelalagar

தவமும் தவம் உடையார்க்கு ஆகும்-பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே; அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம்-ஆகலான், அத்தவத்தை அம் முன்தவம் இல்லாதார் முயல்வது பயன்இல் முயற்சியாம்.
விளக்கம்:
(பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந் நல் வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை,
(என்றவாறு). இது தவமிலார்க்குத் தவம் வாராது; வரினுந் தப்பு மென்றது.