குறள் 265

தவம்

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

vaentiya vaentiyaang keithalaal seithavam
eendu muyalap padum


Shuddhananda Bharati

Penance

What they wish as they wish is won
Here hence by men penance is done.


GU Pope

Penance

That what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful 'penance' done.

Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come).


Mu. Varadarajan

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால்‌ செய்யத்தக்க தவம்‌ இந்நிலையிலும்‌ (இல்லற வாழ்க்கையிலும்‌) முயன்று செய்யப்படும்‌.


Parimelalagar

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால்-முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம். ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம். இம்மைக்கண் அறிவடையோரான் முயலப்படும்.
விளக்கம்:
('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) விரும்பியன விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை யிவ் விடத்தே முயல வேண்டும்,
(என்றவாறு). இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.