குறள் 270

தவம்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

ilarpala raakiya kaaranam notrpaachiilarpalar
notrpaachiilarpalar nolaa thavar


Shuddhananda Bharati

Penance

Many are poor and few are rich
For they care not for penance much.


GU Pope

Penance

The many all things lack! The cause is plain,
The 'penitents' are few. The many shun such pain.

Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.


Mu. Varadarajan

ஆற்றல்‌ இல்லாதவர்‌ பலராக உலகில்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌, தவம்‌ செய்கின்றவர்‌ சிலராகவும்‌ செய்யாதவர்‌ பலராகவும்‌ இருப்பதே ஆகும்‌.


Parimelalagar

இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின்; நோற்பார் சிலர் நோலாதவர் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்.
விளக்கம்:
(செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன; என்னை? "நுண்ணுணர்வு இன்மை வறுமை; அஃதுடைமை, பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்" (நாலடி. 251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப் பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம், தவஞ் செய்வார் சிலராதல்; அது செய்யாதார் பலராதல்,
(என்றவாறு)