குறள் 268

தவம்

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

thannuyir thaanarap paetrraanai yaenaiya
mannuyi raellaandh tholum


Shuddhananda Bharati

Penance

He worship wins from every soul
Who Master is by soul control.


GU Pope

Penance

Who gains himself in utter self-control,
Him worships every other living soul.

All other creatures will worship him who has attained the control of his own soul.


Mu. Varadarajan

தவவலிமையால்‌ தன்னுடைய உயிர்‌ தான்‌ என்னும்‌ பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள்‌ எல்லாம்‌ (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்‌.


Parimelalagar

தன் உயிர் தான் அறப் பெற்றானை-தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை; ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும்.
விளக்கம்:
(தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட்பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப் பெற்ற வனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும்,
(என்றவாறு). உயிரென்றது சலிப்பற்ற அறிவை ; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறு தலாவது அகங்கார மறு தல்.