குறள் 955

குடிமை

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று

valangkuva thulveelndhthak kannum palangkuti
panpil thalaippirithal inru


Shuddhananda Bharati

Nobility

The means of gift may dwindle; yet
Ancient homes guard their noble trait.


GU Pope

Nobility

Though stores for charity should fail within, the ancient race
Will never lose its old ancestral grace.

Though their means fall off, those born in ancient families, will not lose their character (forliberality).


Mu. Varadarajan

தாம்‌ பிறர்க்குக்‌ கொடுத்துதவும்‌ வண்மை வறுமையால்‌ சுருங்கிய போதிலும்‌, பழம்பெருமை உடைய குடியில்‌ பிறந்தவர்‌ தம்‌ பண்பிலிருந்து நீங்குவதில்லை.


Parimelalagar

பழங்குடி - தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப்பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார்.
விளக்கம்:
(தொன்று தொட்டு வருதல்)
விளக்கம்:
('சேர சோழ பாண்டியர்' என்றார்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல். அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கியவிடத்தும், பழய பண்பு வழுவாத குடிப்பிறந்தார் தமது இயல்பினின்றும் நீங்குத லிலர். இது பண்புடைமை விடாரென்றது.