குறள் 953

குடிமை

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு

nakaieekai insol ikalaamai naankum
vakaiyaenpa vaaimaik kutikku


Shuddhananda Bharati

Nobility

Smile, gift, sweet words and courtesy
These four mark true nobility.


GU Pope

Nobility

The smile, the gift, the pleasant word, unfailing courtesy
These are the signs, they say, of true nobility.

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.


Mu. Varadarajan

உண்மையான உயர்குடியில்‌ பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல்‌, பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும்‌ நல்ல பண்புகள்‌ என்பர்‌.


Parimelalagar

வாய்மைக் குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்:
(பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும், 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் மெய்ம்மையுடைய குலத்தினுள்ளார்க்கு அந்த மென்று சொல்லுவர்,
(என்றவாறு).