குறள் 906

பெண்வழிச்சேறல்

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்

imaiyaarin vaalinum paatilarae illaal
amaiyaarthol anjsu pavar


Shuddhananda Bharati

Being led by women

Who fear douce arms of their wives
Look petty even with god-like lives.


GU Pope

Being led by Women

Though, like the demi-gods, in bliss they dwell secure from harm,
Those have no dignity who fear the housewife's slender arm.

They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.


Mu. Varadarajan

மனைவியின்‌ தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர்‌ தேவரைப்‌ போல்‌ இவ்வுலகத்தில்‌ சிறப்பான நிலையில்‌ வாழ்ந்த போதிலும்‌ பெருமை இல்லாதவரே ஆவர்‌.


Parimelalagar

இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும்; ஆண்மையிலர்.
விளக்கம்:
(அமரர்போல வாழ்தலாவது, பகைத்து வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது, கூடாமையின் 'வாழினும்' என்றார். 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற்கு குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தேவரைப்போல் இன்புற்று வாழினும், பெருமையிலராவர் ; மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர்,
(என்றவாறு). இது செல்வமுடையராயினும் பிறரால் மதிக்கப்படாரென்றது.