குறள் 902

பெண்வழிச்சேறல்

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்

paenaathu paenvilaivaan aakkam paeriyathor
naanaaka naanuth tharum


Shuddhananda Bharati

Being led by women

Who dotes, unmanly, on his dame
His wealth to him and all is shame.


GU Pope

Being led by Women

Who gives himself to love of wife, careless of noble name
His wealth will clothe him with o'erwhelming shame.

The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself;


Mu. Varadarajan

கடமையை விரும்பாமல்‌ மனைவியின்‌ பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம்‌, பெரியதொரு நாணத்தக்க செயலாக நாணத்தைக்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும்.
விளக்கம்:
(எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலம் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண, அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப் பானது செல்வம், பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாக, தனக்கு நாணினைத் தரும்,
(என்றவாறு).