குறள் 901

பெண்வழிச்சேறல்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது

manaivilaivaar maanpayan yeithaar vinaivilaiyaar
vaentaap porulum athu


Shuddhananda Bharati

Being led by women

Who dote on wives lose mighty gain
That lust, dynamic men disdain.


GU Pope

Being led by Women

Who give their soul to love of wife acquire not nobler gain;
Who give their soul to strenuous deeds such meaner joys disdain.

Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.


Mu. Varadarajan

மனைவியை விரும்பி அவள்‌ சொன்னபடி நடப்பவர்‌ சிறந்த பயனை அடையமாட்டார்‌; கடமையைச்‌ செய்தலை விரும்புகின்றவர்‌ வேண்டாத பொருளும்‌ அதுவே.


Parimelalagar

மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார்; தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம்.
விளக்கம்:
(மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம்: அஃது அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்லவிடாமையின், விடற்பாற்று என்பதாம்.)


Manakkudavar

பெண்வழிச் சேறலாவது இன்பம் காரணமாக மனையாள் வழி ஒழுகுதல் லும், கணிகையரோடுகூடி ஒழுகுதலும், நறவுண்டு களித்தலும், சூதாடலும், தீயள வன்றி மிக உண்டலுமென ஐந்து வகைப்படும்; அவற்றுள், பெண்வழிச் சேறலாவது மனைவியர் வழியொழுகுதலினால் வரும் குற்றங் கூறுதல். (இ-ள்.) மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்; யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை,
(என்றவாறு). இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி, அவர்தம்மையே காதலிப் பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.