குறள் 869

பகைமாட்சி

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்

seruvaarkkuch saenikavaa inpam arivilaa
anjsum pakaivarp paerin


Shuddhananda Bharati

Noble hostility

The joy of heroes knows no bounds
When timid fools are opponents.


GU Pope

The Might of Hatred

The joy of victory is never far removed from those
Who've luck to meet with ignorant and timid foes.

There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.


Mu. Varadarajan

அறிவு இல்லாத அஞ்சும்‌ இயல்பு உடைய பகைவரைப்‌ பெற்றால்‌, அவரை எதிர்த்துப்‌ பகைகொள்பவர்க்கு இன்பங்கன்‌ தொலைவில்‌ நீங்காமல்‌ நிற்கும்‌.


Parimelalagar

அஞ்சும் பகைவர்ப் பெறின். br> அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா- அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா.
விளக்கம்:
(உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணிடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின், அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும்,
(என்றவாறு). அறிவு - காரியவறிவு.