குறள் 838

பேதைமை

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்

maiyal oruvan kaliththatrraal paethaithan
kaiyonru utaimai paerin


Shuddhananda Bharati

Folly

Fools possessing something on hand
Like dazed and drunken stupids stand.


GU Pope

Folly

When folly's hand grasps wealth's increase, ‘twill be
As when a mad man raves in drunken glee.

A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.


Mu. Varadarajan

பேதை தன்‌ கையில்‌ ஒரு பொருள்‌ பெற்றால்‌ (அவன்‌ நிலைமை பித்துப்‌ பிடித்த ஒருவன்‌ கள்‌ குடித்து மயங்கினாற்‌ போலாகும்‌.


Parimelalagar

பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும்.
விளக்கம்:
('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.


Manakkudavar

(இதன் பொருள்) முன்னே பித்தாய்மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற்போலாவதொன்று; பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.