குறள் 835

பேதைமை

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு

orumaich seyalaatrrum paethai yelumaiyum
thaanpuk kalundhthum alaru


Shuddhananda Bharati

Folly

The fool suffers seven fold hells
In single birth of hellish ills.


GU Pope

Folly

The fool will merit hell in one brief life on earth,
In which he entering sinks through sevenfold round of birth.

A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.


Mu. Varadarajan

எழுபிறப்பிலும்‌ தான்‌ புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத்‌ துன்பத்தைப்‌ பேதை தன்‌ ஒரு பிறவியில்‌ செய்து கொள்ள வல்லவனாவான்‌.


Parimelalagar

பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்பள்ளே செய்து கொள்ள வல்லனாம்.
விளக்கம்:
(எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புகளிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத் துன்பம் ஊழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச் செயல் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பேதை ஒரு பிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்யவல் லன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை ,
(என்றவாறு). புக்கழுந்தல் - ஒருகால் நாகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.