குறள் 678

வினைசெயல்வகை

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

vinaiyaan vinaiyaakkik koadal nanaikavul
yaanaiyaal yaanaiyaath thatrru


Shuddhananda Bharati

Modes of action

Lure a tusker by a tusker
Achieve a deed by deed better.


GU Pope

The Method of Acting

By one thing done you reach a second work's accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent

To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.


Mu. Varadarajan

ஒரு செயலைச்‌ செய்யும்போது அச்செயலால்‌ மற்றொரு செயலையும்‌ செய்து முடித்துக்கொள்ளல்‌, ஒரு யானையால்‌ மற்றொரு யானையைப்‌ பிடித்தலைப்‌ போன்றது.


Parimelalagar

வினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக் கொள்க; நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிது மோர் யானையைப் பிணித்தனோடு ஒக்கும்.
விளக்கம்:
[பிணித்தற்கு அருமை தோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே, அம்முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது, ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும், (எ-று), இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவ ரோடு பகைக்குமாறு பண்ணுவார்பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது.