குறள் 677

வினைசெயல்வகை

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்

seivinai seivaan seyanmurai avvinai
ullarivaan ullam kolal


Shuddhananda Bharati

Modes of action

Know first the secret from experts
That is the way of fruitful acts.


GU Pope

The Method of Acting

Who would succeed must thus begin: first let him ask
The thoughts of them who throughly know the task.

The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.


Mu. Varadarajan

செயலைச்‌ செய்கின்றவன்‌ செய்யவேண்டியமுறை, அந்தச்‌ செயலின்‌ உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத்‌ தான்‌ ஏற்றுக்‌ கொள்வதாகும்‌.


Parimelalagar

செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல் - அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல்.
விளக்கம்:
['அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து; அவன் செய்து போந்த உபாயம். அதனை யறியவே, தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமை யாவது அவ்வினையின் து உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக்கோடல்.