குறள் 673

வினைசெயல்வகை

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

ollumvaa yaellaam vinainanrae ollaakkaal
sellumvaai nokkich seyal


Shuddhananda Bharati

Modes of action

It's best to act when feasible
If not see what is possible.


GU Pope

The Method of Acting

When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.

Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.


Mu. Varadarajan

இயலுமிடத்திலெல்லாம்‌ செயலைச்‌ செய்து முடித்தல்‌ நல்லது; இயலவில்லையானால்‌ பயன்படும்‌ இடம்‌ நோக்கியாவது செய்யவேண்டும்‌.


Parimelalagar

ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க.
விளக்கம்:
[இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும் அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார், அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின். இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.]


Manakkudavar

(இதன் பொருள்) இயலும் இடமெல்லாம் வினை செய்தல் நன்று; இயலாத காலத்து அதனை நினைந்திருந்து, இயலும் இடம் பார்த்துச் செய்க,
(என்றவாறு). இது வினை செய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த் துச் செய்கவென்றது,