குறள் 671

வினைசெயல்வகை

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

koolchi mutivu thunivaeithal aththunivu
thaalchiyul thangkuthal theethu


Shuddhananda Bharati

Modes of action

When counsel takes a resolve strong
Weak delay of action is wrong.


GU Pope

The Method of Acting

Resolve is counsel’s end. If resolutions halt
In weak delays, still unfulfilled, ’tis grievous fault.

Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.


Mu. Varadarajan

ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும்‌. அவ்வாறு கொண்ட துணிவு காலந்‌ தாழ்த்து நிற்பது குற்றமாகும்‌.


Parimelalagar

சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை, பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின், அது குற்றமுடைத்து.
விளக்கம்:
['சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் எனவே, துணிவு எய்தும் அளவும் சூழ வேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு; செய்யுங்காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழி வாகலானும், பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் 'தீது' என்றார்.]


Manakkudavar

வினைசெயல்வகையாவது வினை செய்யுமாறு கூறுதல். மேல் வினை செய் யுங்கால் திண்ணியராக வேண்டு மென்று கூறினார் திண்ணியார் வினை செய் யும் வண்ணம் கூறுகின்றாராதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்; அவ்வாறு துணிந்த வினை நீட்டித்தலின்கண்ணே கிடக்குமாயின், அது தீதாம்,
(என்றவாறு). இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின், அதனையறிந்து பகை வர் தம்மைக் காப்பார்; ஆதலால், நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டும் மென்றது.