குறள் 556

கொடுங்கோன்மை

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி

mannarkku mannuthal sengkoanmai akhthinrael
mannaavaam mannark koli


Shuddhananda Bharati

The cruel tyranny

Glory endures by sceptre right
Without it wanes the royal light.


GU Pope

The Cruel Sceptre

To rulers' rule stability is sceptre right;
When this is not, quenched is the rulers' light.

Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have noendurance.


Mu. Varadarajan

அரசர்க்குக்‌ புகழ்‌ நிலைபெறக்‌ காரணம்‌ செங்கோல்‌ முறையாகும்‌. அஃது இல்லையானால்‌ அரசர்க்குப்‌ புகழ்‌ நிலைபெறாமல்‌ போகும்‌.


Parimelalagar

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம்; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப் புகழ்கள்தாம் உளவாகா.
விளக்கம்:
(விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் "இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக" (நாண்மணி 17) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால் ஒளி மன்னாவாம்: ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று. வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின், பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மை இல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.) --


Manakkudavar

(இதன் பொருள்) அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை ; அஃதில்லையா யாயின், அரசாக்கு ஒளி நிலையாதாம்,
(என்றவாறு). முறை செய்யாமையால் அவன் நிலை பெறுதல் அருமையெனக் குற்றங் கூறு வார் முற்படப் புகழில்லையாம் என்றார்.