குறள் 551

கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து

kolaimaetrkon taaritr kotithae alaimaetrkondu
allavai seitholukum vaendhthu


Shuddhananda Bharati

The cruel tyranny

The unjust tyrant oppressor
Is worse than cruel murderer.


GU Pope

The Cruel Sceptre

Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing.

The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruelthan the man who leads the life of a murderer.


Mu. Varadarajan

குடிகளை வருத்தும்‌ தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச்‌ செய்து நடக்கும்‌ அரசன்‌ கொலைத்‌ தொழிலைக்‌ கொண்டவரைவிடக்‌ கொடியவன்‌.


Parimelalagar

கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுதல் தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன்; அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து - பொருள் வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறை அல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன்.
விளக்கம்:
(அவர் செய்வது ஒரு பொழுதைத் துன்பம்; இவன் செய்வது எப்பொழுதும் துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால் மயக்கு உறழ்ச்சி. 'வேந்து' என்பது உயர்திணைப் பொருட்கண் வந்த அஃறினைச் சொல். 'அலை கொலையினும் கொடிது' என்பதாயிற்று.)


Manakkudavar

கொடுங்கோன்மையாவது கொடுங்கோன்மையால் வருங் குற்றங் கூறுதல். அது முறைமை செய்யாமையும், அருள் செய்யாமையும், பிறர் நலியாமற்காவாமை யும், முறைகெடச் செய்தலும், குடிகளுக்குத் தண்டனை ஆராயாது செய்தலும் அல்லவை செய்தலும், குடிகளை இரத்தலுமெனப் பலவகைப்படும். இது கூறிய செங்கோன்மையின் மாறுபட்டுவருதலின், அதன்பின்கூறப்பட்டது. (இதன் பொருள்) கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத் தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன், (எ-று)