குறள் 539

பொச்சாவாமை

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

ikalchiyin kettaarai ulluka thaandhtham
makilchiyin maindhthurum polthu


Shuddhananda Bharati

Unforgetfulness

When joy deludes, their fate recall
Whom negligence has made to fall.


GU Pope

Unforgetfulness

Think on the men whom scornful mind hath brought to nought,
When exultation overwhelms thy wildered thought.

Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.


Mu. Varadarajan

தாம்‌ தம்‌ மகிழ்ச்சியால்‌ செருக்குக்‌ கொண்டு கடமையை மறந்திருக்கும்‌ போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால்‌ முற்காலத்தில்‌ அழிந்தவரை நினைக்கவேண்டும்‌.


Parimelalagar

தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து-அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது; இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக-முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க,
விளக்கம்:
[காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் 'தம் மகிழ்ச்சியின்' என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும், கூறினார். கெட்டாரை உள்ளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து 'எண்ணுக' என்று பாடம் ஓதுவாரும் உளர்.]


Manakkudavar

(இதன் பொருள்) அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க ; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது,
(என்றவாறு) இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.