குறள் 457

சிற்றினஞ்சேராமை

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்

mananalam mannuyirk kaakkam inanalam
yellaap pukalum tharum


Shuddhananda Bharati

Avoiding mean company

Goodness of mind increases gain
Good friendship fosters fame again.


GU Pope

Avoiding mean Associations

Goodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain.

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.


Mu. Varadarajan

மனத்தின்‌ நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்‌; இனத்தின்‌ நன்மை (அவ்வளவோடு நிற்காமல்‌) எல்லாப்‌ புகழையும்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் (தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்; இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.
விளக்கம்:
('மன் உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச்சொல் முன்னும் கூறப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும், புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார். மேல் 'மனநன்மை இனநன்மை பற்றி வரும்,' என்பதனை உட்கொண்டு, அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என, அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மனநன்மை நிலை பெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல், இன் நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்,
(என்றவாறு) இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.