குறள் 455

சிற்றினஞ்சேராமை

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

manandhthooimai seivinai thooimai irandum
inandhthooimai thoovaa varum


Shuddhananda Bharati

Avoiding mean company

Purity of the thought and deed
Comes from good company indeed.


GU Pope

Avoiding mean Associations

Both purity of mind, and purity of action clear,
Leaning no staff of pure companionship, to man draw near.

Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity ofconduct.


Mu. Varadarajan

மனத்தின்‌ தூய்மை, செய்யும்‌ செயலின்‌ தூய்மை ஆகிய இவ்விரண்டும்‌ சேர்ந்த இனத்தின்‌ தூய்மையைப்‌ பொறுத்தே ஏற்படும்‌.


Parimelalagar

மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - (அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய) மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும்; இனம் தூய்மை தூவா வரம் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம்.
விளக்கம்:
(மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் "தூவறத் துறந்தாரை" (கலித். நெய்த. 1) என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான் இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய விரண்டும் இனம் நன்றாதலைப் பற்றி வரும்,
(என்றவாறு). இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.