குறள் 407

கல்லாமை

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று

nunmaan nulaipulam illaan yelilnalam
manmaan punaipaavai yatrru


Shuddhananda Bharati

Non

Like painted clay-doll is his show
Grand subtle lore who fails to know.


GU Pope

Ignorance

Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.

The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisiteworks, is like (the beauty and goodness) of a painted earthen doll.


Mu. Varadarajan

நுட்பமானதாய்‌ மாட்சியுடையதாய்‌ ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால்‌ சிறப்பாகப்‌ புனையப்பட்ட பாவை போன்றது.


Parimelalagar

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம் - நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்; மண், மாண் புனை பாவை அற்று - சுவையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவையுடைய எழுச்சியும் அழகும் போலும்.
விளக்கம்:
(அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும் மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். "உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது'' (சீவக. முத்தி. 154) ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவு இல்வழிச் சிறப்பில் என்பதாம். இதனால் அவர் வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.) --


Manakkudavar

(இதன் பொருள்) நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வி யில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக் கும்,
(என்றவாறு). இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.