குறள் 394

கல்வி

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

uvappath thalaikkooti ullap pirithal
anaiththae pulavar tholil


Shuddhananda Bharati

Education

To meet with joy and part with thought
Of learned men this is the art.


GU Pope

Learning

You meet with joy, with pleasant thought you part;
Such is the learned scholar's wonderous art!

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think(Oh! when shall we meet them again.)


Mu. Varadarajan

மகிழும்படியாகக்‌ கூடிப்‌ பழகி. (இனி இவரை எப்போது காண்போம்‌ என்று) வருந்தி நினைக்கும்‌ படியாகப்‌ பிரிதல்‌ புலவரின்‌ தொழிலாகும்‌.


Parimelalagar


விளக்கம்:
உவப்பத் தலைக்கடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும் அவர் உவக்குமாறு தலைப்பெய்து, 'இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து; புலவர் தொழில் - கற்றறிந்தாரது தொழில்.
விளக்கம்:
(தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.


Manakkudavar

(இதன் பொருள்) மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும்; கற்றோர் செய்யுந்தொழில்,
(என்றவாறு). இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.